திங்கள், 27 ஜூலை, 2009

வீரமணியின் மனு தள்ளுபடி

தந்தை பெரியாரின் எழுத்துக் களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
.
1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை தான் தோற்றுவித்த சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தந்தை பெரியார் இருந்த போது, குடியரசு பத்திரிகையில் அவர் தனது கட்டுரைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதனை பெரியார் திராவிடர் கழகம் பல்வேறு நூல் தொகுதிகளாக வெளியிட ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தான் இருந்து வருவதால், தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக் களும் தங்களுக்கே சொந்தமானது என்றும், இவற்றை வெளியிட தங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.' இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நூல்களை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

தந்தை பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பின் விவரம் வருமாறு:
கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் இடையே சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டுள்ளார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக் களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு நடுவே அவரது கொள்கைகளை அடைத்து விடக்கூடாது.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் ஆஜராகினர்.

சனி, 11 ஜூலை, 2009

ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் 2

கிழக்குத் திமோர்
போர்ச்சுகலின் காலனி நாடாக இருந்த கிழக்குத் திமோர் “1975 ஆம் ஆண்டு நவம்பர் 28” ஆம் நாள் தன்னைச் சுதந்திர நாடாகப் பிர கடனம் செய்தது. அந்தப் பிரகட னத்தை மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய - லெனினிய அரசுகள் அங்கீகரித்தன. மக்கள் சீனம் அங்கீ கரித்தது. அவு°திரேலியா, போர்ச்சுக் கல், இந்தோனேசியா ஆகியவை அங்கீகரிக்கவில்லை.
அதே நேரத்தில் இந்தோனேசியாவினால் அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டு அந்நாட்டினது ஒரு மாகாணமாக கிழக்குத் திமோர் மாற்றப்பட்டது.
ஆனால், கிழக்குத் திமோர் மக்கள் இரு தசாப்த காலமாக விடுதலைப் போராட் டத்தைத் தொடர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் நாளன்று கிழக்குத் திமோரில் மேற்பார்வையில், இந்தோனேசியாவி லிருந்து கிழக்குத் திமோர் பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரு வாரியான மக்கள், கிழக்கு திமோரின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாளன்று கிழக்குத் திமோரை ஒரு தனிநாடாக அனைத்துலகம் ஏற்றுக் கொண்டது.
தென் கமுரூன்
கமரூன் கூட்டமைப்பில் 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் தென் கமரூன் இணைக்கப்பட்டது. தென்காமரூனானது ஆங்கில மொழி பேசுவோரையும் இதர பகுதிகள் பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கொண்டதாக இருந்தது.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாளன்று வாக்கெடுப்பின் மூலம் கமரூன் கூட்டமைப்பு “ஒற்றையாட்சி” முறைக்கு மாறி யது. தென் கமரூன் பிரதேசம் சுயாட்சியை இழந்தது. கமரூன் குடியரசினது வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களாக தென் கமரூன் மாற்றமடைந்தது. கூடுதலாக சுயாட்சி உரிமை கோரி தென் கமரூன் பிரதேசத்தில் போராடினர். 1961 ஆம் ஆண்டு அமுலில் இருந்த கூட்டமைப்பு முறை மீள உருவாக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கமரூன் நாட்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு தென் கமரூன் பிரதேசம் விடுதலை கோரியது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் தென் கமரூன் மக்கள் ஒன்றியத்தினால் அம்பஜானியா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையை போலவே விடுதலைக்குப் போராடும் அல்லது அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் நாடுகளினது ஒன்றியமாக யு.என்.பி.ஓ. என்ற அமைப்பு செயல்படுகிறது. இதில் கடந்த 2005 ஆம ஆண்டு முதல் தென் கமரூன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
இதேபோல் செசன்யா, புண்ட்லாந்து, நாகர்னோ கராபக், தென் ஒசீட்டியா, அப்கைசியா மற்றும் டிரான்ஸ்னிஸ்திரியா ஆகிய பிரதேசங்களும் 1990 ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையாக தமது சுதந்திர நாட்டுப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.
தோல்வியில் முடிந்த சுதந்திரப் பிரகடனங்கள்
அமெரிக்க பிரதேசத்தில் உள்ள கரோலினா 1712 ஆம் ஆண்டு இரண்டு தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளாகப் பிரிந்தன.
1776 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாளன்று தெற்கு கரோலினா, பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்து தனக்கான சுய அரசாங்கத்தை அமைத்தது. 1788 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8 ஆவது மாகாணங்களில் ஒன்றாக அது இணைந்தது.
இருப்பினும் 1860 ஆம் அண்டு டிசம்பர் 20ஆம் நாள், அமெரிக்கக் கூட்டமைப்பி லிருந்து வெளியேறுவதாக தெற்கு கரோலினா சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க உள்நாட்டு யுத்தம் உருவானது. அதன் பின்னர் அமெரிக் கக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.
குடியேற்றப்பட்ட வெள்ளை இனத்தவரின் ‘ரொடீசியா’ பிரகடனம்
பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத் தின் உரிமையாளரான சீசில் ரொட் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜிம்பாவே மற்றும் ஜாம்பியாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கங்களை வெட்டி எடுக்கும் உரிமை பெற்றார்.
உரிமை பெற்ற சீசில் ரொட் ஏராளமான வெள்ளை இனத்தவரை ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் குடியேற்றினார். இதனால் 1893 இல் யுத்தம் வெடித்தது.
ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவின் பெரும் பகுதிகளை ரொட், தனது சொந்த கூலிப்படையின் துணையுடன் கைப்பற்றி னார்.
அதனைத் தொடர்ந்து ஜாம்பியா சீசில் ரொட்டின் பெயரால் வடக்கு ரொடீசியாக வும், ஜிம்பாப்வே தெற்கு ரொடீசியாகவும் மாறின. ரெண்டு ரொடீசியாக்களுமே 1911 ஆம் ஆண்டு வரை தனித்தே இயங்கின.
1923 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் செல்வாக்குட்பட்ட பகுதியில் அமைந்த சுயாட்சி அரசாங்கமாக தெற்கு ரொடீசி யாவை பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் மாற்றியது. 1924 ஆம் ஆண்டு வடக்கு ரொடிசீயாவின் நிர்வாகத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒப்படைத்தது.
1930 ஆம் ஆண்டு வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. முறைசார் வர்த்தகங்கள் மற்றும் தொழில் களில் ஈடுபட்ட பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகை யால் தங்களது சொந்த மண்ணில் வெள்ளை இனத்தவர்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளப் பட்ட பண்ணைகளிலும் தங்கச் சுரங்கங் களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தாக வேண்டிய நிலைக்கு பூர்வகுடி கறுப்பின மக்கள் தள்ளப்பட்டனர்.
1953 ஆம் ஆண்டு தெற்கு ரொடீசிய காலனித்துவ சுயாட்சி அரசாங்கம் மற்றும்
பிரித்தானிய நிர்வாகத்தின் கீழாக வடக்கு ரொடீசியா மற்றும்
நியஸலாந்த் (தற்போதைய மலாவி) ஆகிய இணைக்கப்பட்டு ரொடீசியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.
தொடர்ந்தும் பூர்வகுடி கறுப்பின மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம், ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் ஆகியவை பூர்வ குடி கறுப்பின மக்களுக்காகப் போராடின. அப்போது ஜிம்பாப்வே பூர்வகுடி கறுப்பின மக்களின் விடுதலை இயக்கங்களைத் தடை செய்த தெற்கு ரொடீசிய நிர்வாகம், அதன் தலைவர்களை சிறையிலடைத்தது.
1960களில் ஆப்பிரிக்காவிலிருந்த பிரித் தானிய காலனி நாடுகள் விடுதலை பெற்றன. இதனால் ரொடீசியக் கூட்டரசு கலைந்தது.
1963 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழிருந்த வடக்கு ரொடீசியாவான ஜாம்பியா விடுதலை பெற்றது. நியாஸலாந்த் என்ற மலாவியும் விடுதலை பெற்றது. (தொடரும்)

இலங்கையின் 13வது சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குகிறதா? பறிக்கிறதா?

இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை:
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி, உலக அரங்கில் அவமானப்பட்டுக் கிடக்கும் பார்ப்பனிய இந்திய ஆட்சியும் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று பேசி வருகிறது. இவர்கள் எல்லோருமே பார்ப்பன இந்து ஏடு உட்பட இப்போது அரசியல் தீர்வுக்காக ஒரு திட்டத்தை முன் வைத்துப் பேசி வருகிறார்கள். அரசியல் சட்டத்தில் - 1988 ஆம் ஆண்டு ஜெய வர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று பேசி வருகிறார்கள். ஆனால், 13வது சட்டத் திருத்தத்தில் என்ன உரிமைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கூறவோ, விவாதிக்கவோ, இவர்கள் தயாராக இல்லை. உலகத்தின் அரசியல்களை எல்லாம் கட்டுரைகளாக வெளியிடும் சிங்களத்தின் அதிகாரபூர்வ ஏடாக செயல்படும் ‘இந்து’ ஏடும், 13வது சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதை விளக்கிட முன்வரவில்லை. பார்ப்பனப் பிடியில் சிக்கியுள்ள ஆங்கில ஊடகங்கள் எல்லாமுமே ஈழத் தமிழர் போராட்டங்களின் நியாயங்களை விவாதப் படுத்தவே இல்லை. திட்டமிட்டு, ஒரு சார்பாக இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊது குழல்களாகவே வெட்கமின்றி செயல்பட்டன.
1988 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம். தோழர் களே! தமிழர்களை சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமைப்பட்டிருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதுதான் இந்த 13வது திருத்தம்.
இந்த சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதியில் மாகாண கவுன்சில்களையும், அமைச்சர்களையும் நியமித்துக் கொள்ளலாம். ஆனால், அமைச்சர் களுக்கு அதிகாரங்கள் ஏதும் இல்லை. இலங்கை குடியரசுத் தலைவரால் மகாண கவுன்சிலுக்கு நேரடியாக நியமனம் செய்யப்படும் - ஆளுநருக்கு தான் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கள குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு உறுதுணையாக இருந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் அமைச்சர் களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘உரிமை’. மாகாண கவுன்சில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நிர்வாகம் தடைபட்டால், மாகாண கவுன்சிலின் உரிமைகளை, இலங்கை நாடாளுமன்றம் முழுமையாக தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடலாம். எனவே அப்படி இலங்கை குடியரசுத் தலைவர் மாகாண கவுன்சிலை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும்போது அதை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை கிடை யாது. மாநில ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கி, அவருக்கு உதவியாக செயல் பட வேண்டும் என்பதன் அர்த்தம் - ஆளுநருக்கு, சேவகர்களாக அவர்கள் செயல்படவேண்டும் என்பதுதான். நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரங்களும் ஆளுநருக்குத்தான் உண்டு; அமைச்சரவைக்கு அல்ல. மாகாண ஆளுநராக நியமிக்கப்படுபவர் நிதி மற்றும் பொது நிர்வாக அமைச்சருக்குரிய அதிகாரங்களோடு செயல்படு வார். அவரது ஆணைப்படி அமைச்சரவை செயல் படவேண்டும். அவர்கள் கூறும் சட்டங்களை இயற்ற வேண்டும்.
அதே போல் மாநில காவல்துறையைக் கட்டுப் படுத்தும் உரிமை - அமைச்சரவைக்கு இல்லை. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மாகாண காவல் ஆணையம் ஒன்றின் கட்டுப்பாட்டிலே தான் காவல்துறை செயல்படும். இந்த மூன்று உறுப் பினர்களில் தலைமை அதிகாரியை நியமிப்பவர் இலங்கையின் குடியரசுத் தலைவர். மாநில முதல்வரால் நியமிக்கப்படும் ஒரு பிரதிநிதியும் இதில் இருப்பார். ஆனால், காவல்துறையினருக்கு பயிற்சித் தரும் அதிகாரம் மாகாண கவுன்சிலுக்கு கிடையாது. இலங்கையின் மத்திய அரசு தான் பயிற்சிகளை அளிக்கும் மாகாணத்தின் பொது ஒழுங்குக்கு பொறுப்பு - காவல்துறை தான். மாகாண அமைச்சர்கள் இதில் தலையிட முடியாது. இதிலும் ஒரு அதிகாரி மீது தேசப் பாதகாப்புக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ, விசாரணை நடத்தவோ, தடுப்புக் காவலலில் கைது செய்யவோ, காவல்துறை ஆணையத்துக்கும் உரிமை கிடையாது. இலங்கை யின் மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள தேசிய காவல்துறைப் பிரிவுக்குத்தான இந்த உரிமை உண்டு. இலங்கையில் இப்போதும் அமுலிலுள்ள பயங்கர வாத தடுப்புச் சட்டம் கொடூரமான பிரிவுகளைக் கொண்டது. பிரேதப் பரிசோதனைகூட நடத்தாமல் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை எரித்து விடலாம் என்கிறது இந்தச் சட்டம். சர்வதேச நீதிமன்றமே இந்தச் சட்டத்தின் கொடூரமான பிரிவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. நாகரிகம் உள்ள எந்த சமூகமும் தனது சட்டப் புத்தகத்தில் இது போன்ற சட்டங்கள் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. இலங்கை அரசுக்கு இதனால் என்ன மானம் கெட்டுப் போய்விடப் போகிறது? மானமற்ற கொடூரமான அரசு தானே? இந்த சட்டத்தை தமிழர் பகுதியில் அமுல்படுத்தும் உரிமையை இலங்கை அரசு தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறது.
இது மட்டுமல்ல, தமிழர்களின் நிலம் தொடர்பான உரிமையும், மாகாண கவுன்சில்களுக்கு கிடையாது. இது தொடர்பான முழு உரிமையையும் இலங்கை அரசே தன் வசம் வைத்திருக்கிறது. இலங்கை அரசியல் சட்டத்தின் 33(டி) பிரிவின் கீழ் தமிழர் பகுதியின் நிலம் கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்தப் பிரிவு இலங்கை முழுமைக்குமான நிலத்தில் ஒரு பகுதியை வழங்குவதற்கோ, விற்பதற்கோ முழு உரிமையையும் இலங்கை குடியரசுத் தலைவருக்கே வழங்குகிறது. நிலம் மட்டுமல்ல, அசையா சொத்து களுக்கும் இது பொருந்தும். மாகாண கவுன்சிலுக் கான அதிகாரத்தின் கீழ் - ‘நிலம் - அது தொடர்பான தீர்வுகள்’ இடம் பெற்றிருந்தாலும் - வழங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான உரிமைகளை சிங்கள மத்திய அரசே எடுத்துக் கொண்டுவிட்டது.
இலங்கையின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு அன்றைய அதிபர் ஜெயவர்த்தனா சார்பில் வாதாடிய எச்.டபுள்யூ ஜெயவர்த்தனா வெளிப்படையாகவே கூறினார்.
“இந்த சட்டத்திருத்தத்தின்படி அரசுக்கான நிலங்கள் தொடர்பான அதிகாரம் - மாகாண கவுன்சில்களுக்கு கிடையாது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், மாகாண கவுன்சில்களுக்கு, அரசுக்குரிய நிலங்களைக் கையாளும் வழிகளைத் திறந்து விட முடியாது.”
(“Under the Land Policy as envisaged in the Amendment, no state land will be vested in a provincial council; in other words no giving away of state land to the provinces....” - Srinlanka Sun, Oct.1987)
தமிழர்களின் மாகாண கவுன்சிலுக்கு தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு தமிழர்களின் மண் மீது உரிமை கிடையாது. அந்த உரிமையை சிங்கள மத்திய அரசுக்கே வழங்குகிறது. இந்த 13வது சட்டத்திருத்தம், சட்டரீதியாகவே தமிழர் மண்ணை பறித்துக் கொள்கிறது இந்த சட்டத்திருத்தம்.
தமிழ் மண்ணின் நிலத்தை மற்றவர்களுக்கு வழங்குவதற்கான உரிமையை இலங்கை அரசு சட்டப்பூர்வமாக தனது உரிமையாக்கிக் கொண்டு விட்டதால் தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் குடியேற்றம் சட்டப்படி நடக்க கதவு திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது நடந்து வரும் சிங்களக் குடியேற்றத்துக்கு சட்ட வடிவம் தந்துவிட்டார்கள். அதே போல் ஏற்கனவே நாம் கூறியவாறு காவல் துறை மீதான கட்டுப்பாட்டு உரிமையும், பொது ஒழுங்கை பாதுகாக்கும் உரிமையும், அமைச் சரவைக்கு கிடையாது. அது மாநில ஆளுநரிடம் போய்விட்டது.
அது மட்டுமல்ல, மாகாண கவுன்சிலுக்கு வரி விதிப்பு அதிகாரமும் கிடையாது. மாகாண ஆளுநர் பரிந்துரைத்த வரி விதிப்புகளுக்கு மட்டுமே, கவுன்சில் சட்டம் இயற்ற முடியும்.
அதேபோல், ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் உரிமையும், கவுன்சிலுக்கு வழங்கப்படவில்லை. மாகாண நிதி ஆதாரங்கள் தொடர்பான அனைத்து உரிமைகளும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கே உண்டு. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையை அவர்தான் தயாரித்து சமர்ப்பிப்பார். கவுன்சில்களுக்காக மத்திய அரசு ஒதுங்கும் நிதியிலிருந்து - செலவு செய்யக் கூடிய நிதிக்கு மாகாண கவுன்சிலிடமிருந்து அனுமதி பெறவும் தேவை இல்லை. கவுன்சிலில் வைத்து விவாதிக்கவும் அவசியமில்லை. அப்படி கவுன்சி லிடம் வாக்கெடுப்பு நடத்திடும் உரிமை சில செலவினங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவை என்ன தெரியுமா? மாகாண ஆளுநருக்கான ஊதியம்; மத்திய அரசு கடனாக வழங்கும் தொகைக்கான வட்டி; இது தவிர, நாடாளுமன்றம் சட்டப்படி அறிவிக்கக்கூடிய வேறு செலவினங்கள். அதாவது, ஆளுநரின் பரிந்துரை இல்லாத எந்த மான்ய கோரிக்கையையும் கவுன்சில் முன் வைக்க முடியாது.
இலங்கையின் குடியரசுத் தலைவர் ஏதாவது, ஒரு மாகாணத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக கருதினால் ஒரு பிரகடனத்தை வெளியிட்டு நிதிநிலையை ஒழுங்குப்படுத்தக்கூடிய ஒழுங்குமுறை விதிகளை மாகா ணஆளுநருக்கு அறிவிப்பார். ஆக, மாகாண கவுன்சிலின் நிதி தொடர்பான அதிகாரங் கள் முழுவதும் ஆளுநரிடமும், குடியரசுத் தலைவரி டமுமே தங்கியுள்ளன.
இவைகூட நிலையானது அல்ல. இந்த 13வது அரசியல் சட்டத்திருத்தத்தில் இலங்கை நாடாளு மன்றம் எந்த மாற்றங்களையும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு கொண்டு வந்து மாற்றிக் கொள்ள முடியும். பொதுவாக அரசிய லமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிபந்தனை கூட இதற்குக் கிடையாது. இலங்கை நாடாளு மன்றத்தில் ஒரு வாக்கு அதிகம் பெற்றுகூட இந்தத் திருத்தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இந்த 13வது சட்டத் திருத்தத்திலேயே இலங்கை நாடாளுமன்றம் மெஜாரிட்டி ஆதரவுடன் திருத்தங்களைக் கொண்டு வந்துவிடலாம். ஆக - 13வது சட்டத்திருத்தம் என்பது தமிழர்களுக்கு உரிமை வழங்கும் சட்டத் திருத்தம் அல்ல. சிங்களர்கள் - தமிழர்கள் மீது நடத்தும் அரசியல் விளையாட்டு, இந்த ‘சட்டத்திருத்தம்’ என்ற நாடகத்தின் காட்சிகள் எப்போதும் எந்த வடிவிலும் மாற்றங்களை எடுத்துக் கொண்டிருக்கும்.
1983 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் 6வது திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அது இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘குரலை’ நெரிக்கும் திருத்தம். இதன்படி தமிழர்களுக்கு தனித்தாயக உரிமை வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்றத் துக்குள்ளேயோ அல்லது வெளியேவோ பேசினால், அவர்கள் பதவி பறிக்கப் பட்டுவிடும். சர்வதேச நீதிமன்றத்தால் இந்த சட்டத்திருத்தம் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. இப்போது 13வது திருத்தத்தின்படி மாகாண கவுன்சில் உறுப்பினர்களும், அமைச்சர்களும் இந்த 6வது சட்டத்தின் கீழ் தான் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு உருவான ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம்கூட - தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளை ‘தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழும் பிரதேசம்’ (hயஎந நெநn யசநயள டிக hளைவடிசiஉயட hயbவையவiடிn) என்பதை அங்கீகரித்தது. பிறகு - அந்த அங்கீகாரத்தையே கூடுதலாக ஒரு விளக்கத்தை இணைத்து பலவீனப்படுத்திவிட்டார்கள். ‘தமிழர்கள் வரலாற்றுப் பகுதி’ என்பதோடு - கூடுதல் விளக்கமாக “நீண்டகாலமாக தமிழர்களும் இந்த எல்லைப் பகுதியில் பிற இனக்குழுக்களோடு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர்” என்ற பிரிவை இணைத்துக் கொண்டு விட்டார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சிங்களர்களைப்போல் ‘இன வாதம்’ பேசியவர்கள் அல்ல. இனத்துக்கான உரிமையைத்தான் கேட்டார்கள். 1985 இல் அனைத்து தமிழ்ப் போராளி குழுக்களும் பங்கேற்ற இலங்கை அரசு பிரதிநிதிகளுடன் இந்தியாவின் ஏற்பாட்டில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழர்கள் ஒருமித்து முன்வைத்த கோரிக்கையில் நான்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
1. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களை ஒரு தேசமாகவோ, தேசிய இனமாகவோ அங்கீகரிக்க வேண்டும்.
2. அவர்களுக்கு பாரம்பர்ய பிரதேசம் இருப்பதை அங்கிகரிக்க வேண்டும்.
3. அவர்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
4. இலங்கைத் தீவை தங்களது தேசமாகக் கருதுவோர் தமிழர் குரலுக்கு குடி மக்களுக்கான உரிமைகளையும், அவர்களுக்கான அடிப்படை உரிமை களையும் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த நான்கு அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு,இலங்கை அரசு முன் வைக்கும் எந்தத் தீர்வுத் திட்டத்தையும் பரிசீலிக்கத் தயார் என்றுதான் தமிழர்களின் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முன் வந்தனர். அப்படி நிபந்தனை வைத்த குழுக்கள்தான் - இப்போது அனைத்து உரிமைகளையும் உதறிவிட்டு, இலங்கைக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்து, அதன் அமைச்சரவையிலும் இடம் பிடித்துக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை நின்று இன்று இராணுவத்துக்கு ஆள்காட்டி வேலை செய்யும் துரோகத்திலும், மான வெட்கமின்றி இறங்கியுள்ளனர். இந்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது. மக்கள் மன்றத்தில் இவர்கள் அவமானப்பட்டு நிற்கிறார்கள். இவர்களை இந்திய உளவு நிறுவனங்களும், பார்ப்பன ஊடகங்களும் தலை மீது தூக்கி வைத்துக் கூத்தாடுகின்றன. நாம் எதற்காக, இதைக் குறிப்பிடுகிறோம் என்றால், தமிழர்கள் ஒருபோதும் சிங்களர் வாழும் தேசப் பகுதிக்கு உரிமை கொண்டாடியது இல்லை. ஒட்டு மொத்த இலங்கையையும் தமிழர்கள் ஆண்ட வரலாறுகள் உண்டு என்றாலும்கூட, அதன் பிறகு உருவாக்கிக் கொண்ட சிங்களர்களின் தனி தேசத்தை, தமிழர்கள் அங்கீகரிக்க மறுக்கவில்லை. தமிழ் ஈழத்துக்குப் போராடிய போராளிகள், விடுதலைப்புலிகள் சிங்களப் பிரதேசத்தின் மீது போர் தொடுக்கவும் இல்லை. இ°ரேல் பால°தீனத்தை ஆக்கிரமித்ததுபோல் ஒரு காலத்திலும், அவர்கள் சிங்களப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவும் இல்லை.
மாறாக - தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பை அடக்குமுறையை எதிர்த்துத்தான் போராடினார்கள். தமிழர்கள் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கும் அதே நேரத்தில் சிங்களர்கள் தமிழர்களின் தேசியத்தை அங்கீகரிக்கவே தயாராக இல்லை என்பதே உண்மை. சிறீலங்கா தேசியத்தை முன் வைத்து தமிழர்களின் தனித்த தேசியத்தை அங்கீகரிக்க மறுத்தார்கள். அந்தப் பார்வையோடு தங்களின் அரசியல் சட்டத்தையும் உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். இலங்கை அரசின் சட்டம் ஒற்றையாட்சியையே முன் வைக்கிறது.
இரு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதை அங்கீகரிக்க மறுக் கிறது. இந்த ‘ஒற்றை ஆட்சி’ என்ற சட்டத்துக்குள் சிங்களர் பேரினவாதத்துக்கு தமிழர்கள் அடிபணிந்து வாழ்வதை சட்டபூர்வமாக்கும் ஒரு முயற்சிதான் 13வது சட்டத்திருத்தம் என்பதைத் தவிர, இது, தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கிடும் திருத்தமல்ல. எவருடனும் இதை நாம் விவாதிக்கத் தயார். உரிமைகளை மறுத்துவிட்டு, உரிமைகளற்ற நிர்வாகங்களை மட்டுமே பகிர்ந்தளிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை ஊடகங்கள் விவாதத்துக்கு உட்படுத்தவில்லை. ஆனால், ஏதோ ‘13வது சட்டத் திருத்தம்’ என்ற ‘அலாவுதீன் அற்புத விளக்கை’ இலங்கை தமிழர் களுக்கு வழங்க தயாராக காத்துக் கொண்டிருப்பது போலவும், விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமாக ராணுவ நடவடிக்கைகளிலே ஈடுபட்டு தோல்வியைத் தழுவியது போலவும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் - இந்திய உளவுத்துறையிலும் பார்ப்பனிய ஊடகங் களாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதை தமிழர்கள் உணர வேண்டும்.
ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:
இந்நிலையில் தெற்கு ரொடீசியாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இயான் சிமித், பிரித்தானி யாவிடம் தெற்கு ரொடீசியா வுக்கான விடுதலையைக் கோரினார். ஆனால், பிரித்தானிய அரசாங்கமோ, பூர்வகுடி கறுப்பின பெரும் பான்மையினரின் ஆட்சி ஒப்படைக்கின்ற போதுதான் சுதந்திரம் பற்றி பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது.
இதனால் குடியேற்றப்பட்ட வெள்ளை இன மக்களின் சார்பில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் தெற்கு ரொடீசியா ஒருதலைபட்சமான சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டது. இயான் ஸ்மித் தன்னை பிரதமராக அறிவித்தார். ரொடீசி யாவின் இந்தப் பிரகடனத்துக்கு முன்னோடிப் பிரகடனமாக அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை ஸ்மித் சுட்டிக்காட்டினார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் பொது நலவாய சபையும் இதனை எதிர்த்தன. அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல்முறையாக ரொடீசியா மீது 1968 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. இதனிடையே தடை செய்யப்பட்ட இயக்கங்கள், கொரில்லா யுத்தங்களைத் தொடங்கின.
தென்னாப்பிரிக்க நாடு, ரொடீசியா மீது கரிசனை காட்டியபோதும் அங்கீகரிக்க வில்லை. 1979 ஆம் ஆண்டு நார்வேயில் இருந்த தனது மகனின் திருமணத்தில் பங்கேற்க தெற்கு ரொடுசியாவின் பிரதமராக அறிவித்துக் கொண்ட °மித்துக்கு நார்வே அரசாங்கம் அனுமதி அளிக்கவும் மறுத்தது. ஒருதலை பட்சமான சுதந்திரப் பிரகடனத்துக்கு பின்னர் அனைத்துலகத்திலிருந்து தெற்கு ரொடீசியா தனிமைப்படுத்தப்பட்டதாக மாறியது. அனைத்துலக நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சியில் 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இனப்பாகுபாடற்ற தேர்தல் நடத்த தெற்கு ரொடீசிய அரச தலைவராக இருந்த ஸ்மித் ஒப்புக் கொண்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்மித்தின் நிறவெறி அரசாங்கத்தை பூர்வகுடி கறுப்பின மக்கள் தூக்கியெறிந்தனர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்கர்கள் தேசிய ஒன்றியத்தின் தலைவர் முகபே வெற்றி பெற்று தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளார். தெற்கு ரொடீசியா, மீண்டும் ஜிம்பாப்வே என்ற பெயர் மாற்றம் அடைந்தது.
கடங்கா
காங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மாகாணம் கடங்கா என்பதாகும். காங்கோ அரசாங்கமானது கடங்காவுக்கு 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூடுதல் சுதந்திரத் துக்கான அனுமதியை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடங்கா, தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு பெல்ஜியம் ஆதரவளித்தது. இதனிடையே 1961 ஆம் ஆண்டு காங்கோவின் பிரதமர் லூமூமாம்பா படுகொலை செய்யப் பட்டார். லூமூமாம்பாவின் மரணத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டப் பட்டது. 1962 ஆம் ஆண்டு ஐ.நா. படை, கடங்கா மீது தாக்குதல் நடத்தியது. 1963 ஆம் ஆண்டு கடங்காவின் தனிநாட்டுப் பிரகட னத்தை ஐ.நா. முடிவுக்கு கொண்டு வந்தது.
மினெர்வா
1852 ஆம் ஆண்டு பசிபிக் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு மினெர்வா. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இத்தீவை ஆக்கிரமித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் தன்னை ஒரு சுதந்திர நாடாக மினெர்வா பிரகடனம் செய்தது. சொந்த நாணயத்தையும் அது உருவாக்கியது. மினெர்வாவின் சுதந்திரப் பிரகடனம் குறித்து அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டோங்கா, பிஜி உள்ளிட்டவை விவாதித்தன. இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள், டோங்கா நாட்டு மக்களின் மீன்பிடித்தளமாக மினெர்வா இருப்பதாகவும் மினெர்வா மீது தமது நாட்டுக்கே உரிமை இருப்பதாகவும் டோங்கா அரசாங்கம் வெளியிட்டது. தற்போது வரை மினெர்வா விடுதலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வடக்கு சைப்ரசின் துருக்கிய குடியரசு
பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து சைப்ர° 1960 ஆம் ஆண்டு ஆக°ட் 16 ஆம் நாள் விடுதலை பெற்றது. அந்நாட்டில் கிரேக்க சைபீரியர்கள் 80 விழுக்காட்டினரும் துருக் கிய சைப்ரீயர்கள் 18 விழுக்காடும் உள்ளனர்.
1963 ஆம் ஆண்டு அந்நாட்டு முதலாவது அரச தலைவர் ஆர்ச்பிசம் மகாரிய°, 13 அரசியல் சட்ட திருத்தங்களை பரிந்துரைத் தார். ஆனால் இத்திருத்தங்களை துருக்கிய சைபீரியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து சைப்ர° அரசாங்கத்துக்கும் சைபீரிய துருக்கியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை 1965 ஆம் ஆண்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சைப்ரஸ் மீது 1974 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் துருக்கி தாக்குதல் நடத்தியது. 1960 ஆம் ஆண்டைய அரசியலமைப்பு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த துருக்கி அழுத்தம் கொடுத்து இத்தாக்குதலை நடத்தி யது. அதன் பின்னர் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அப்பேச்சுக்கள் தோல்வியடைய சைப்ரசுக்குள் துருக்கியப் படை உள் நுழைந்தது. 37 விழுக்காட்டு பிர தேசத்தை துருக்கி ஆக்கிரமிக்க இலட்சக் கணக்கான கிரீக் சைபீரியர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளன்று வடக்கு சைப்ரசில் துருக்கிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் 541 ஆம் தீர்மானத்தின்படி 1983 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இந்தப் பிரகடனம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு சைப்ரசி லிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது. துருக்கி மட்டுமே அந்நாட்டை அங் கீகரித்தது. சைப்ர° நாட்டை குறிப்பிடுகை யில் “கிரீக் சைப்ரஸ் நிர்வாகப் பகுதி” என்றே இன்றளவும் துருக்கி குறிப்பிட்டு வருகிறது.
நாகாலாந்து
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாகாலாந்துக்கு பிரித்தானியர்கள் 1832 ஆம் ஆண்டு சென்றனர். அது வரை எந்தவித அன்னிய தலையீடு இல்லாமல் சுதந்திர நாடாக நாகா பிரதேசம் இருந்து வந்தது. பிரித்தானிய இந்திய நிர்வாகத்தில்கூட நாகாலாந்து இணைக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் களில் ஒருவரான காந்தியை நாகா ழுழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். நாகா தேசிய இனமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை படைத்தவர்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை காந்தியார் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாளன்று நாகலாந்து சுதந்திர நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது. 1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகாலாந்து நாட்டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் உருவானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்த நாகாலாந்துக்கு இந்திய ஒன்றியத்தில் இணையுமாறு பகிரங்க அழைப்பையும் இந்தியா விடுத்தது. இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாளன்று நாகாலாந்து தேசிய சபையானது பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. 99.9 விழுக்காடு நாகா தேசிய இனமக்கள், இறைமையுள்ள நாகா சுதந்திர அரசாங்கத்துக்காகவே வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்து தனிநாட்டு அரசாங்கத் துக்கான இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1960களில் நாகாலாந்தை இந்தியா ஆக்கிரமித்து தனது மாநிலங்களில் ஒன்றாக்கிக் கொண்டது. நாகா லாந்தின் சுய நிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா. சபையைப் போன்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளின் ஒன்றியத்தில் நாகா விடுதலை அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலி°ட் கவுன்சில் இணைந்து கொண்டது.


(நிறைவு)