புதன், 31 அக்டோபர், 2007

கோவையில் மகிந்த ராஜபக்ச நிர்வாண கொடும்பாவி எரிப்பு முயற்சி: 30 பெரியார் தி.க.வினர் கைது

இணைப்பு)கோவையில் மகிந்த ராஜபக்ச நிர்வாண கொடும்பாவி எரிப்பு முயற்சி: 30 பெரியார் தி.க.வினர் கைது
[திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2007, 04:57 PM ஈழம்] [புதினம் நிருபர்]
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழ்நாட்டின் கோவையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் மகிந்தவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயற்சித்தனர்.
ஆனால் அங்கு பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்து பறித்துச் சென்றனர். கொடும்பாவியை எரிக்க முயற்சித்ததாக பெரியார் திராவிடர் கழகத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறிலங்காவின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்து அப்போது கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னையில்...
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று மாலை 4:30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் கேசவன், அன்பு தனசேகரன், தபசி குமரன் மற்றும் தமிழக மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

வெள்ளி, 26 அக்டோபர், 2007

இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல --மஞ்சை வசந்தன்

சேதுக் கால்வாய்த் திட்டம் நீண்ட நாளைய முயற்சி. செயல் திட்டம் கூடிவரும் வேளையில் மதவெறிக்கூட்டமும், சுயநலக் கூட்டமும் எதையெதையோ சொல்லி, எப்படியெப்படியோ எதிர்த்து, இறுதியில் அவர் களின் கடைசிப் புகலிடமாக உச்சநீதிமன்றத்தில் நின்று உருக்குலைக்கப்பார்க்கிறார்கள்.இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இரா மாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை.நம்பிக்கை என்பது ஒரு வரின் தனிப்பட்டக் கருத்து; அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக் கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால்,பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக் கையான வாதத்தை வைப்பார் கள்.நாவரசு என்ற, அண்ணா மலைப் பல்கலைக் கழக மருத் துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே!அப்படியென்றால் நீதிமன் றத்திற்குத் தேவை ஆதாரமே யன்றி, நம்பிக்கையல்ல.ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதா ரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச் சோதனையும் செய்யாமல் அப் படியே அனுப்ப வேண்டு மென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன் றளவும் அத்தங்கத்திற்கு கணக் கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்!ஆனால், குப்பனும் சுப் பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர்.மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள். ஆதா ரம் இருக்கிறதா? என்று கேட் டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.பாமர மனிதன்கூடப் பட் டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங் களுக்கு மட்டும் அது நியாய மாகவே படுகிறது!சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந் திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள் ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமை யாக்கிக் கொண்டார். ஆகா யத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர் களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள் ளுமா? குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா?பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக் கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த் துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்!பூமாதேவி கோடிக்கணக் கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட் டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?இவையெல்லாம் பைத்தியக் காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக் கையின் அடிப் படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப் பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப் படையில் தடை யாணை வழங் கப்படுகிறது?அப்படியே நம்பிக்கை யென்று கொண்டாலும், இரா மர் பாலம் என்பதும் இலங் கையென்பதும் வடஇந்தியா விலுள்ளதா? தென்னிந்தியா விலுள்ளதா? அதையே விளங் கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட் டம், அடாவடித்தனம் அன்றா டம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா?இந்த இலங்கையா?1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.வடக்கே காசி - தெற் கேயுள்ளது தென்காசிவடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என் பது அல்ல.தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன் டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண் மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென் னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப் பட்டு வருகிறது.இது தென்னிலங்கை என் றால், வடக்கேயுள்ளது இலங் கை என்பது உறுதியாகிறது.எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தி யாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.தாமிரபரணி ஆறு தென் னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங் கள் உள்ளன. இந்த இலங்கை யின் பழைய பெயர் தாமிர பரணி என்பதேயாகும். அசோ கர் கல்வெட்டில் இந்த இலங் கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.ஆறு எங்குச் சென்று முடி கிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடி வடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.அவ்வாறு தான், தாமிர பரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கை யின் பழைய பெயர், தாமிர பரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப் போது தனித்தீவாக இல்லை யென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத் தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமா யணம் கூறுவதால், இராமாய ணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல; வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியா வில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப் படும் இலங்கை, வட இந்தியா வில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது.
காலால் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழலில், காட்டில் திரிந்த இராமன், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.மேலும், இந்தியாவில் பல அரசுகள், பல மன்னர்களால் ஒவ்வொரு பகுதியும் ஆளப் பட்டு அந்தக் காலத்தில், ஒரு நாட்டைவிட்டு, மற்றொரு நாட்டிற்கு இராமன் முதலா னோர் வர வாய்ப்பும் இல்லை; வரவேண்டிய கட்டாயமும் இல்லை; வருவதும் கடினம். எனவே, அயோத்தியின் ஆளு கைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த காட்டில்தான் அவர் கள் வாழ்ந்திருக்க முடியும்.5. பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்துவிட்டு வா! என்பதுதான் தசரதனின் கட் டளை. ஒரு அரசன் காட்டுக் குப் போ என்று கட்டளை யிட்டால் என்ன அர்த்தம்? அவனது ஆளுகைக்கு உட் பட்ட காட்டுக்குப் போ என் பதுதானே? ஒரு அரசு - நாடு, காடு என்ற இருபெரும் பகுதி களை உடையது. மன்னர்கள் காடுகளுக்குச் சென்று வேட் டையாடுவர். முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் மேற்கொள்வர் என்பதே மர பாகச் சொல்லப்படும் செய்தி. அதன் வழி நோக்கின், தசர தனின் ஆளுகைக்கு உட்பட்ட, அவனது நாட்டை ஒட்டியுள்ள காட்டிற்கு மரவுரி போன்ற தவக்கோலத்துடன் இராமன் சென்றான் என்பதுதானே பொருள். அப்படியாயின் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திற்கு எப்படி வரமுடியும்? ஏன் வரவேண் டும்? எனவே, இராமாயணத் தில் சொல்லப்படும் இலங்கை தென்னிலங்கை அல்ல அது வடக்கேயுள்ள இலங்கை என் பது உறுதி செய்யப்படுகிறது.6. இராமாயணத்தில் இலங் கையில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மண்டோதரி, இந்திரஜித், சூர்ப் பநகா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. வட இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதாலே அவர்களுக்கு இப் பெயர்கள் இருந்தன. தென்னி லங்கையைச் சேர்ந்தவர்களா யின் அவர்கள் பெயர் தமிழில் இருந்திருக்கும். இதன் வழி நோக்கினும் இந்த இலங்கை யல்ல என்பது உறுதி.7. காட்டில் இராமன் இருக் கும் இடத்திற்கு சூர்ப்பநகா சென்றாள், என்று இராமா யணத்தில் கூறப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்த சூர்ப் பநகா வடநாட்டிலுள்ள இராமனை எவ்வாறு அறிந் தாள்? எதற்காக வடநாட்டிற் குச் சென்றாள்? காரணமே இல்லை. அப்படியிருக்க தென் னிலங்கையிலிருந்து சூர்ப்பநகா சென்றதாகக் கூறுவது முற் றிலும் தவறு.மேலும், தென்னிலங்கை யைச் சேர்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ். அப்படியிருக்க இவள் எப்படி வடநாட்டு இராமனுடன், லட்சுமணனு டன் பேசியிருக்க முடியும்? சவால் விட்டு வந்திருக்க முடி யும்? இராமன் லட்சுமணன் தமிழ் தெரியாதவர்களாயிற்றே! சுருக்கமாகச் சொன்னால் ஆயி ரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இராமனைப் பற்றி சூர்ப்பநகா கேள்விப்பட் டிருக்கக் கூட வாய்ப்பில்லை!8. வடநாட்டில் உள்ள காட் டில் மூக்கறு பட்டு மார்பறு பட்டு மீண்டும் தென்னிலங் கைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும். தன் அண்ணன் இராவ ணனிடம் நடந்ததைச் சொல்லி, இராவணன் சீதையைக் கவர்ந்து வர வடநாட்டிற்குச் செல்ல எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும். பல மாதங்க ளுக்குப் பிறகே இராவணன் வடநாட்டைச் சென்றடைந்தி ருக்க முடியும். அந்த கால இடைவெளியில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூவரும் காட்டில் வேறு பகு திக்குச் சென்றிருப்பர். அப்படி யிருக்கையில் இராவணன் சீதையைக் கண்டு பிடித்து எப் படி தூக்கி வந்திருக்க முடியும்?இவ்வளவும் நடக்க வேண் டும் என்றால், அயோத்திக்கு அருகில் அயல்நாடாயிருந்த வட இலங்கையில்தான் இவை நடந்திருக்க முடியும்.சூர்ப்பநகை ராமனை அறி யவும், அவள் அவமானப்பட வும், அண்ணனிடம் உடனே வந்து சொல்லவும், அண்ணன் இராவணன் உடனே புறப் பட்டு போய் சீதையைக் கொண்டு வரவும், இராமன் உடனே தூது அனுப்பி விடு விக்கக் கேட்டுக் கொள்ளவும் அருகிலுள்ள இலங்கையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம். தென்னிலங்கையிலிருந்து இத்தனை முறை போய்வர வாய்ப்பே இல்லை. எனவே, இராமாயணத்தில் சொல்லப் படுவது தென்னிலங்கையல்ல. என்பது உறுதியாகிறது.9. சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் வான்வழி யாகச் சென்றான், ஜடாயு எதிர்த்துப் போரிட்டது என் றெல்லாம் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அப்படி யாயின் அந்தக் காலத்திலே விமானம் இருந்திருந்தால், இராமன் இலங்கைக்குச் செல் லுகையில் விமானத்திலே சென் றிருக்கலாமே. ஏன் பாலம் கட்ட வேண்டும்?அதுமட்டுமல்ல, இலங்கை யில் போர் முடிந்து இராமன் திரும்பும்போது அயோத்தியில் விமானத்தில் வந்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படி யாயின் போகும் போது விமா னத்தில்தானே போயிருக்க வேண்டும்? ஏன் பாலம் கட்ட வேண்டும்? அப்படியாயின் இராமர் பாலம் என்பதே கட்டுக்கதை அல்லவா?10. சஞ்சீவி மலையையே தூக்கி வரக்கூடிய வலுப் படைத்த அனுமான் இருக்கும் போது இவர்கள் ஏன் பாலம் கட்ட வேண்டும்? இராமன், இலட்சுமணன் இவர்களை பல்லக்கில் அமரச் செய்து அப்படியே அலேக்காசு தூக்கிச் சென்று அனுமார் இலங்கையில் விட்டிருப்பாரே. அப்படியிருக்க பாலம் கட்டி னார்கள் என்றால், முட்டா ளைத் தவிர எவன் நம்புவான்?11. இராமர் பாலங்கட்டிய போது குரங்குகள் மலை களைச் சுமந்து சென்று போட்டதாக இராமாயணம் சொல்கிறது. அப்படியாயின் இலங்கைக்கு எதிரிலுள்ள தமிழகக் கடலோரப் பகுதியில் அதாவது இராமேஸ்வரம் பகுதியில் மலைகள் இருக்க வேண்டும். ஆனால் இல் லையே! அப்படியிருக்க எப் படி மலைகளை பாறைகளை எடுத்துச் சென்று போட்டி ருக்க முடியும்?எனவே, மலை சூழ்ந்த வட இந்தியாவிலுள்ள இலங்கை யில்தான் அது சாத்தியம். எனவே இராமாயணத்தில் குறிக்கப்படுவது இந்த இலங்கை அல்ல!12. இராவணன் கைலாய மலையைத் தூக்கினான் என்று அவனது வல்லமையைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படி யாயின் இராவணன் வட இந் தியாவில் வாழ்ந்தவன் என்பது உறுதியாகிறது. அப்படியாயின் இராமாயணத்தில் வருவது வட இந்தியாவிலுள்ள இலங்கை யேயன்றி தென்னிலங்கையல்ல!13. மேலும் சேதுக் கால் வாய்ப் பகுதியிலுள்ள மணல் திட்டை தோண்டிப் பார்த்தால் 20 மீட்டர்களுக்கு மேல் மணலே செல்கிறது. பாறை களைக் கொண்டு பாலம் அமைந்திருந்தால் பாறைகள் அல்லவா வரவேண்டும். எனவே, இது இயற்கையான மணல் மேடு என்பது மலை மேல் விளக்காக விளங்குகிறது.14. வால்மீகி இராமாய ணத்தில், இலங்கையில் போர் முடிந்த பின் நாடு திரும்பிய இராமன், தான் கட்டிய (பாலத்தை) அணையைத் தானே அழித்துவிட்டுச் சென் றதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இராமன் கட் டிய பாலம் இன்னமும் இருக் கிறது என்பது மோசடியல் லவா?இராமாயணத்தையும், இராமனையும் மக்கள் நம்புகி றார்கள் என்றால், இராமர் பாலமும் இன்னமும் இருக் கிறது என்று கூறுவது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல் லவா? அப்படியாயின் இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக்கூடாது என்பவர்கள் தானே இராமனுக்கு எதிரான வர்கள்? விந்திய மலைப் பகுதி அல்லது மஹாநதிப் பகுதி களை ஆய்வு செய்தால், இராமாயணத்தில் குறிக்கப் படும் இலங்கையை அடை யாளங்காண முடியும். அமர்க் கண்ட் அல்லது சோட்டா நாக் பூர் பகுதியில்தான் இலங்கை இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலன் கூறுகின் றனர்.அதுமட்டுமல்ல, கடல் பகுதியில் இராமர் பாலம் அமைக்கப்பட்டதாக இராமா யணம் அறிவிக்கவில்லை. கடல் பகுதியில் பாலம் அமைக்கவும் இயலாது.எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட நாட் டின் அண்டை நாடாகவே இலங்கை இருந்திருக்க முடி யும். மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தென் இலங்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.மேற்கண்ட தடயங்களை ஒரு முறைக்கு பல முறை படித்தால் யாரும் இவ்வுண் மையை அய்யமற அறிந்து தெளிய முடியும்.அப்படியிருக்க சம்பந்தமில் லாத தென் இலங்கையோடு இராமாயணத்தை முடிச்சுப் போட்டு, இயற்கையான மணல் திட்டை இராமர் பாலம் என்று வீண்சிக்கலை உருவாக்குவது, சுயநலமிகள் மற்றும் மத வெறியை ஊட்டி, மக்களை உசுப்பி, அதை வாக்காக மாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அலையும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடா வடிச் செயல்பாடாகும். இதற்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாகக் கூடாது என்பதே நீதியாளர் களின் எண்ணம். நாட்டின் நலன் விரும்புவோரின் நாட்ட மும் அதுவேயாகும்.இல்லாத ஒரு கற்பனைக் காரணத்திற்காக ஒரு இணை யற்ற திட்டத்தை முடக்காமல், தடை ஆணை விரைவில் நீக்கப்பட்டு, திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட அனைத்து மக்களும் துணை நிற்க வேண் டும். அதற்கு இக்கருத்துகள் தீவிரமாகப் பரப்பட்டு மக்க ளுக்கு தெளிவு உண்டாக்கப்பட வேண்டும்; உண்மை விளக்கப் பட வேண்டும்.

சனி, 13 அக்டோபர், 2007

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

புதன், 10 அக்டோபர், 2007

"இராமன் பாலம்" ஓர் வரலாற்று மோசடி - கருத்தரங்கம்

திருப்பூர் கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் 7.10.2007 ஞாயிறு காலை 9 மணிக்கு "இராமன் பாலம்" ஓர் வரலாற்று மோசடி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் ம.பெரியசாமி தலைமை வகித்தார் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தொடக்கவுரை நிகழ்த்தினார் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் கருத்துரை ஆற்றினார் கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர் கூட்டத்தில் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் இல.அங்ககுமார், மாவட்ட தலைவர் சு.துரைசாமி, அகிலன், சரவணமூர்த்தி, முகில்ராசு, பனிமலர், இரமேசு, முத்து, தனகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக சி.தினேசு நன்றியுரை ஆற்றினார்.

கோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;

அக்டோபர்.2அன்று கழகம் அறிவித்தபடி போராட்டம் நடைபெற்றது. அன்று காலை 10 மணிக்கு பல்லடத்தில் இருந்து மாவட்டத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் புறப்பட்ட போராட்டக் குழுவினர் முதலில் செம்மிபாளையம் சென்றனர். அங்குள்ள தேநீர்கடையில் இரட்டை குவளைகளை கடைக்காரரே அப்புறப்படுத்தி இனிமேல் வைக்கமாட்டோம் என உறுதியளித்தார் அதைத்தொடர்ந்து போராட்டக்குழுவினர் மேற்கு ராசாக்கவுண்டம்பாளையம் சென்றனர். அங்கிருந்த தேநீர் கடையில் இரட்டை இருக்கைகளை கழகத்தோழர்கள் அப்புறப்படுத்த கோரினர் ஆனால் கடைக்காரர் மறுத்ததால் தோழர்கள் இருக்கைகளை அடித்து நொறுக்கினர்.பின்னர் அங்கிருந்து பல்லடம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செ.ம. வேலுச்சாமியின் ஊரான செங்கத்துறைக்குச் சென்றது ஆனால் ஊருக்கு முன்னாடியே காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் தோழர்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி சுமார் 60 தோழர்களை கைது செயதனர். கைது செய்யப்பட்டவுடன் தோழர்கள் துணை போகாதே,துணை போகாதே காவல்துறையே துணை போகாதே சாதி வெறிக்கு துணைபோகாதே...அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் கருப்புசட்டைகள் அஞ்சமாட்டோம்... உடைப்போம் உடைப்போம் இரட்டை குவளைகளை உடைப்போம் என முழக்கமிட்டவாறே காவல் துறையின் வாகனத்தில் ஏறினர்.கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு மேற்குராசாக்கவுண்டம்பாளையத்தில் இரட்டை இருக்கைகளை உடைத்த காரணத்திற்காக பொங்கலூர் கார்த்திக்,சுக்கம்பாளையம் ஆறுமுகம் ஆகிய இரண்டு தோழர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து காவலில் வைத்துவிட்டு மற்ற தோழர்களை விடுதலை செய்தனர். இந்தபோராட்டத்தில் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார்,சூலூர் பன்னீர்செல்வம்,பல்லடம் திருமூர்த்தி,ஒன்றியச்செயலாளர் விஜயன்,பொங்கலூர் மயில்சாமி,திருப்பூர் சண்முகம், மாணவரணி அமைப்பாளர்கள் திருப்பூர் கார்த்திகேயன்,சூலூர் பனிமலர் மற்றும் சூலூர் தமிழ்ச்செல்வி,அ.ப.சிவா,அனுப்பட்டி பிரகாஷ்,முகில் ராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செவ்வாய், 9 அக்டோபர், 2007

திருப்பூரை கலக்கிய ஊர்வலம்

தந்தை பெரியார் அவர்களின் 129 -ஆவது பிறந்த நாள் விழா திருப்பூரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 30 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியிலிருந்து மாவட்டத்தலைவர் துரைசாமி அவர்கள் தலைமையில் புறப்பட்ட இருசக்கர வாகன ஊர்வலம். திருப்பூரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று கல்லாங்காடு,வீரபாண்டி,சந்தைபேட்டை,பழையபேருந்து நிலையம்,தொடர்வண்டிநிலையம்,ராயபுரம்,குமார்நகர்,பெரியார்நகர்,போயம்பாளையம்பிரிவு,புதியபேருந்து நிலையம் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி வைத்து இரட்டை குவளைஒழிப்பு,மற்றும் கேது சமுத்திர திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து கொண்டே வந்த ஊர்வலம் வெள்ளியங்காடு வந்தடைந்தது இறுதியாக அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோபிவேலுச்சாமி,மடத்துக்குளம்அன்பு,வழக்கறிஞர்சுப்புராஜ் ஆகியோர் பேசினர் மன்னைதங்கம்,தியாகு ஆகியோர் கொள்கை பாடல்களை பாடினர். நிகழ்ச்சிகளில் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர்அங்ககுமார்,அகிலன்,நகர தலைவர் சண்முகம்,ஒன்றியபொறுப்பாளர்கள் இராமசாமி,அவிநாசியப்பன்,பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் விஜயன்,ஆறுமுகம்,சண்.முத்துக்குமார்,ஜீவாநகர்குமார்,ஜீன்ஸ்நிறுவனஉரிமையாளர்கள்கண்ண்ன்,வினோத்,சுரேசு உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவரணிஅமைப்பாளர் கார்த்திகேயன்,பெரியசாமி,முத்து, ராமு,லச்சுமணன் ஆகியோர் செய்திருந்தினர்.அனைவருக்கும் முகில்ராசு அவர்கள் மதியம் மாட்டுக்கறி விருந்து வழங்கினார்.

வலைப்பதிவு காப்பகம்