சனி, 14 நவம்பர், 2009

மீண்டு[ம்] வருகிறோம்...

மீண்டு[ம்] வருகிறோம்...
சில நாட்களாய் மனம் கனத்துப் போனதால்...
உடல் மரத்துப் போனதால்...
தளத்தில் எழுதாமல் தவிர்த்திருந்தோம்...
தவிப்பிலிருந்து மீண்டு வருகிறோம்
.
மீண்டு[ம்] வருகிறோம்
...

திங்கள், 27 ஜூலை, 2009

வீரமணியின் மனு தள்ளுபடி

தந்தை பெரியாரின் எழுத்துக் களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
.
1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை தான் தோற்றுவித்த சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தந்தை பெரியார் இருந்த போது, குடியரசு பத்திரிகையில் அவர் தனது கட்டுரைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதனை பெரியார் திராவிடர் கழகம் பல்வேறு நூல் தொகுதிகளாக வெளியிட ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தான் இருந்து வருவதால், தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக் களும் தங்களுக்கே சொந்தமானது என்றும், இவற்றை வெளியிட தங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.' இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நூல்களை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

தந்தை பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பின் விவரம் வருமாறு:
கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் இடையே சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டுள்ளார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக் களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு நடுவே அவரது கொள்கைகளை அடைத்து விடக்கூடாது.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் ஆஜராகினர்.

சனி, 11 ஜூலை, 2009

ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் 2

கிழக்குத் திமோர்
போர்ச்சுகலின் காலனி நாடாக இருந்த கிழக்குத் திமோர் “1975 ஆம் ஆண்டு நவம்பர் 28” ஆம் நாள் தன்னைச் சுதந்திர நாடாகப் பிர கடனம் செய்தது. அந்தப் பிரகட னத்தை மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய - லெனினிய அரசுகள் அங்கீகரித்தன. மக்கள் சீனம் அங்கீ கரித்தது. அவு°திரேலியா, போர்ச்சுக் கல், இந்தோனேசியா ஆகியவை அங்கீகரிக்கவில்லை.
அதே நேரத்தில் இந்தோனேசியாவினால் அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டு அந்நாட்டினது ஒரு மாகாணமாக கிழக்குத் திமோர் மாற்றப்பட்டது.
ஆனால், கிழக்குத் திமோர் மக்கள் இரு தசாப்த காலமாக விடுதலைப் போராட் டத்தைத் தொடர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் நாளன்று கிழக்குத் திமோரில் மேற்பார்வையில், இந்தோனேசியாவி லிருந்து கிழக்குத் திமோர் பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரு வாரியான மக்கள், கிழக்கு திமோரின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாளன்று கிழக்குத் திமோரை ஒரு தனிநாடாக அனைத்துலகம் ஏற்றுக் கொண்டது.
தென் கமுரூன்
கமரூன் கூட்டமைப்பில் 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் தென் கமரூன் இணைக்கப்பட்டது. தென்காமரூனானது ஆங்கில மொழி பேசுவோரையும் இதர பகுதிகள் பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கொண்டதாக இருந்தது.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாளன்று வாக்கெடுப்பின் மூலம் கமரூன் கூட்டமைப்பு “ஒற்றையாட்சி” முறைக்கு மாறி யது. தென் கமரூன் பிரதேசம் சுயாட்சியை இழந்தது. கமரூன் குடியரசினது வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களாக தென் கமரூன் மாற்றமடைந்தது. கூடுதலாக சுயாட்சி உரிமை கோரி தென் கமரூன் பிரதேசத்தில் போராடினர். 1961 ஆம் ஆண்டு அமுலில் இருந்த கூட்டமைப்பு முறை மீள உருவாக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கமரூன் நாட்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு தென் கமரூன் பிரதேசம் விடுதலை கோரியது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் தென் கமரூன் மக்கள் ஒன்றியத்தினால் அம்பஜானியா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையை போலவே விடுதலைக்குப் போராடும் அல்லது அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் நாடுகளினது ஒன்றியமாக யு.என்.பி.ஓ. என்ற அமைப்பு செயல்படுகிறது. இதில் கடந்த 2005 ஆம ஆண்டு முதல் தென் கமரூன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
இதேபோல் செசன்யா, புண்ட்லாந்து, நாகர்னோ கராபக், தென் ஒசீட்டியா, அப்கைசியா மற்றும் டிரான்ஸ்னிஸ்திரியா ஆகிய பிரதேசங்களும் 1990 ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையாக தமது சுதந்திர நாட்டுப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.
தோல்வியில் முடிந்த சுதந்திரப் பிரகடனங்கள்
அமெரிக்க பிரதேசத்தில் உள்ள கரோலினா 1712 ஆம் ஆண்டு இரண்டு தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளாகப் பிரிந்தன.
1776 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாளன்று தெற்கு கரோலினா, பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்து தனக்கான சுய அரசாங்கத்தை அமைத்தது. 1788 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8 ஆவது மாகாணங்களில் ஒன்றாக அது இணைந்தது.
இருப்பினும் 1860 ஆம் அண்டு டிசம்பர் 20ஆம் நாள், அமெரிக்கக் கூட்டமைப்பி லிருந்து வெளியேறுவதாக தெற்கு கரோலினா சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க உள்நாட்டு யுத்தம் உருவானது. அதன் பின்னர் அமெரிக் கக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.
குடியேற்றப்பட்ட வெள்ளை இனத்தவரின் ‘ரொடீசியா’ பிரகடனம்
பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத் தின் உரிமையாளரான சீசில் ரொட் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜிம்பாவே மற்றும் ஜாம்பியாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கங்களை வெட்டி எடுக்கும் உரிமை பெற்றார்.
உரிமை பெற்ற சீசில் ரொட் ஏராளமான வெள்ளை இனத்தவரை ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் குடியேற்றினார். இதனால் 1893 இல் யுத்தம் வெடித்தது.
ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவின் பெரும் பகுதிகளை ரொட், தனது சொந்த கூலிப்படையின் துணையுடன் கைப்பற்றி னார்.
அதனைத் தொடர்ந்து ஜாம்பியா சீசில் ரொட்டின் பெயரால் வடக்கு ரொடீசியாக வும், ஜிம்பாப்வே தெற்கு ரொடீசியாகவும் மாறின. ரெண்டு ரொடீசியாக்களுமே 1911 ஆம் ஆண்டு வரை தனித்தே இயங்கின.
1923 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் செல்வாக்குட்பட்ட பகுதியில் அமைந்த சுயாட்சி அரசாங்கமாக தெற்கு ரொடீசி யாவை பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் மாற்றியது. 1924 ஆம் ஆண்டு வடக்கு ரொடிசீயாவின் நிர்வாகத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒப்படைத்தது.
1930 ஆம் ஆண்டு வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. முறைசார் வர்த்தகங்கள் மற்றும் தொழில் களில் ஈடுபட்ட பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகை யால் தங்களது சொந்த மண்ணில் வெள்ளை இனத்தவர்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளப் பட்ட பண்ணைகளிலும் தங்கச் சுரங்கங் களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தாக வேண்டிய நிலைக்கு பூர்வகுடி கறுப்பின மக்கள் தள்ளப்பட்டனர்.
1953 ஆம் ஆண்டு தெற்கு ரொடீசிய காலனித்துவ சுயாட்சி அரசாங்கம் மற்றும்
பிரித்தானிய நிர்வாகத்தின் கீழாக வடக்கு ரொடீசியா மற்றும்
நியஸலாந்த் (தற்போதைய மலாவி) ஆகிய இணைக்கப்பட்டு ரொடீசியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.
தொடர்ந்தும் பூர்வகுடி கறுப்பின மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம், ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் ஆகியவை பூர்வ குடி கறுப்பின மக்களுக்காகப் போராடின. அப்போது ஜிம்பாப்வே பூர்வகுடி கறுப்பின மக்களின் விடுதலை இயக்கங்களைத் தடை செய்த தெற்கு ரொடீசிய நிர்வாகம், அதன் தலைவர்களை சிறையிலடைத்தது.
1960களில் ஆப்பிரிக்காவிலிருந்த பிரித் தானிய காலனி நாடுகள் விடுதலை பெற்றன. இதனால் ரொடீசியக் கூட்டரசு கலைந்தது.
1963 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழிருந்த வடக்கு ரொடீசியாவான ஜாம்பியா விடுதலை பெற்றது. நியாஸலாந்த் என்ற மலாவியும் விடுதலை பெற்றது. (தொடரும்)

இலங்கையின் 13வது சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குகிறதா? பறிக்கிறதா?

இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை:
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி, உலக அரங்கில் அவமானப்பட்டுக் கிடக்கும் பார்ப்பனிய இந்திய ஆட்சியும் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று பேசி வருகிறது. இவர்கள் எல்லோருமே பார்ப்பன இந்து ஏடு உட்பட இப்போது அரசியல் தீர்வுக்காக ஒரு திட்டத்தை முன் வைத்துப் பேசி வருகிறார்கள். அரசியல் சட்டத்தில் - 1988 ஆம் ஆண்டு ஜெய வர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று பேசி வருகிறார்கள். ஆனால், 13வது சட்டத் திருத்தத்தில் என்ன உரிமைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கூறவோ, விவாதிக்கவோ, இவர்கள் தயாராக இல்லை. உலகத்தின் அரசியல்களை எல்லாம் கட்டுரைகளாக வெளியிடும் சிங்களத்தின் அதிகாரபூர்வ ஏடாக செயல்படும் ‘இந்து’ ஏடும், 13வது சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதை விளக்கிட முன்வரவில்லை. பார்ப்பனப் பிடியில் சிக்கியுள்ள ஆங்கில ஊடகங்கள் எல்லாமுமே ஈழத் தமிழர் போராட்டங்களின் நியாயங்களை விவாதப் படுத்தவே இல்லை. திட்டமிட்டு, ஒரு சார்பாக இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊது குழல்களாகவே வெட்கமின்றி செயல்பட்டன.
1988 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம். தோழர் களே! தமிழர்களை சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமைப்பட்டிருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதுதான் இந்த 13வது திருத்தம்.
இந்த சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதியில் மாகாண கவுன்சில்களையும், அமைச்சர்களையும் நியமித்துக் கொள்ளலாம். ஆனால், அமைச்சர் களுக்கு அதிகாரங்கள் ஏதும் இல்லை. இலங்கை குடியரசுத் தலைவரால் மகாண கவுன்சிலுக்கு நேரடியாக நியமனம் செய்யப்படும் - ஆளுநருக்கு தான் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கள குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு உறுதுணையாக இருந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் அமைச்சர் களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘உரிமை’. மாகாண கவுன்சில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நிர்வாகம் தடைபட்டால், மாகாண கவுன்சிலின் உரிமைகளை, இலங்கை நாடாளுமன்றம் முழுமையாக தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடலாம். எனவே அப்படி இலங்கை குடியரசுத் தலைவர் மாகாண கவுன்சிலை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும்போது அதை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை கிடை யாது. மாநில ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கி, அவருக்கு உதவியாக செயல் பட வேண்டும் என்பதன் அர்த்தம் - ஆளுநருக்கு, சேவகர்களாக அவர்கள் செயல்படவேண்டும் என்பதுதான். நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரங்களும் ஆளுநருக்குத்தான் உண்டு; அமைச்சரவைக்கு அல்ல. மாகாண ஆளுநராக நியமிக்கப்படுபவர் நிதி மற்றும் பொது நிர்வாக அமைச்சருக்குரிய அதிகாரங்களோடு செயல்படு வார். அவரது ஆணைப்படி அமைச்சரவை செயல் படவேண்டும். அவர்கள் கூறும் சட்டங்களை இயற்ற வேண்டும்.
அதே போல் மாநில காவல்துறையைக் கட்டுப் படுத்தும் உரிமை - அமைச்சரவைக்கு இல்லை. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மாகாண காவல் ஆணையம் ஒன்றின் கட்டுப்பாட்டிலே தான் காவல்துறை செயல்படும். இந்த மூன்று உறுப் பினர்களில் தலைமை அதிகாரியை நியமிப்பவர் இலங்கையின் குடியரசுத் தலைவர். மாநில முதல்வரால் நியமிக்கப்படும் ஒரு பிரதிநிதியும் இதில் இருப்பார். ஆனால், காவல்துறையினருக்கு பயிற்சித் தரும் அதிகாரம் மாகாண கவுன்சிலுக்கு கிடையாது. இலங்கையின் மத்திய அரசு தான் பயிற்சிகளை அளிக்கும் மாகாணத்தின் பொது ஒழுங்குக்கு பொறுப்பு - காவல்துறை தான். மாகாண அமைச்சர்கள் இதில் தலையிட முடியாது. இதிலும் ஒரு அதிகாரி மீது தேசப் பாதகாப்புக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ, விசாரணை நடத்தவோ, தடுப்புக் காவலலில் கைது செய்யவோ, காவல்துறை ஆணையத்துக்கும் உரிமை கிடையாது. இலங்கை யின் மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள தேசிய காவல்துறைப் பிரிவுக்குத்தான இந்த உரிமை உண்டு. இலங்கையில் இப்போதும் அமுலிலுள்ள பயங்கர வாத தடுப்புச் சட்டம் கொடூரமான பிரிவுகளைக் கொண்டது. பிரேதப் பரிசோதனைகூட நடத்தாமல் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை எரித்து விடலாம் என்கிறது இந்தச் சட்டம். சர்வதேச நீதிமன்றமே இந்தச் சட்டத்தின் கொடூரமான பிரிவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. நாகரிகம் உள்ள எந்த சமூகமும் தனது சட்டப் புத்தகத்தில் இது போன்ற சட்டங்கள் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. இலங்கை அரசுக்கு இதனால் என்ன மானம் கெட்டுப் போய்விடப் போகிறது? மானமற்ற கொடூரமான அரசு தானே? இந்த சட்டத்தை தமிழர் பகுதியில் அமுல்படுத்தும் உரிமையை இலங்கை அரசு தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறது.
இது மட்டுமல்ல, தமிழர்களின் நிலம் தொடர்பான உரிமையும், மாகாண கவுன்சில்களுக்கு கிடையாது. இது தொடர்பான முழு உரிமையையும் இலங்கை அரசே தன் வசம் வைத்திருக்கிறது. இலங்கை அரசியல் சட்டத்தின் 33(டி) பிரிவின் கீழ் தமிழர் பகுதியின் நிலம் கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்தப் பிரிவு இலங்கை முழுமைக்குமான நிலத்தில் ஒரு பகுதியை வழங்குவதற்கோ, விற்பதற்கோ முழு உரிமையையும் இலங்கை குடியரசுத் தலைவருக்கே வழங்குகிறது. நிலம் மட்டுமல்ல, அசையா சொத்து களுக்கும் இது பொருந்தும். மாகாண கவுன்சிலுக் கான அதிகாரத்தின் கீழ் - ‘நிலம் - அது தொடர்பான தீர்வுகள்’ இடம் பெற்றிருந்தாலும் - வழங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான உரிமைகளை சிங்கள மத்திய அரசே எடுத்துக் கொண்டுவிட்டது.
இலங்கையின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு அன்றைய அதிபர் ஜெயவர்த்தனா சார்பில் வாதாடிய எச்.டபுள்யூ ஜெயவர்த்தனா வெளிப்படையாகவே கூறினார்.
“இந்த சட்டத்திருத்தத்தின்படி அரசுக்கான நிலங்கள் தொடர்பான அதிகாரம் - மாகாண கவுன்சில்களுக்கு கிடையாது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், மாகாண கவுன்சில்களுக்கு, அரசுக்குரிய நிலங்களைக் கையாளும் வழிகளைத் திறந்து விட முடியாது.”
(“Under the Land Policy as envisaged in the Amendment, no state land will be vested in a provincial council; in other words no giving away of state land to the provinces....” - Srinlanka Sun, Oct.1987)
தமிழர்களின் மாகாண கவுன்சிலுக்கு தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு தமிழர்களின் மண் மீது உரிமை கிடையாது. அந்த உரிமையை சிங்கள மத்திய அரசுக்கே வழங்குகிறது. இந்த 13வது சட்டத்திருத்தம், சட்டரீதியாகவே தமிழர் மண்ணை பறித்துக் கொள்கிறது இந்த சட்டத்திருத்தம்.
தமிழ் மண்ணின் நிலத்தை மற்றவர்களுக்கு வழங்குவதற்கான உரிமையை இலங்கை அரசு சட்டப்பூர்வமாக தனது உரிமையாக்கிக் கொண்டு விட்டதால் தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் குடியேற்றம் சட்டப்படி நடக்க கதவு திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது நடந்து வரும் சிங்களக் குடியேற்றத்துக்கு சட்ட வடிவம் தந்துவிட்டார்கள். அதே போல் ஏற்கனவே நாம் கூறியவாறு காவல் துறை மீதான கட்டுப்பாட்டு உரிமையும், பொது ஒழுங்கை பாதுகாக்கும் உரிமையும், அமைச் சரவைக்கு கிடையாது. அது மாநில ஆளுநரிடம் போய்விட்டது.
அது மட்டுமல்ல, மாகாண கவுன்சிலுக்கு வரி விதிப்பு அதிகாரமும் கிடையாது. மாகாண ஆளுநர் பரிந்துரைத்த வரி விதிப்புகளுக்கு மட்டுமே, கவுன்சில் சட்டம் இயற்ற முடியும்.
அதேபோல், ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் உரிமையும், கவுன்சிலுக்கு வழங்கப்படவில்லை. மாகாண நிதி ஆதாரங்கள் தொடர்பான அனைத்து உரிமைகளும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கே உண்டு. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையை அவர்தான் தயாரித்து சமர்ப்பிப்பார். கவுன்சில்களுக்காக மத்திய அரசு ஒதுங்கும் நிதியிலிருந்து - செலவு செய்யக் கூடிய நிதிக்கு மாகாண கவுன்சிலிடமிருந்து அனுமதி பெறவும் தேவை இல்லை. கவுன்சிலில் வைத்து விவாதிக்கவும் அவசியமில்லை. அப்படி கவுன்சி லிடம் வாக்கெடுப்பு நடத்திடும் உரிமை சில செலவினங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவை என்ன தெரியுமா? மாகாண ஆளுநருக்கான ஊதியம்; மத்திய அரசு கடனாக வழங்கும் தொகைக்கான வட்டி; இது தவிர, நாடாளுமன்றம் சட்டப்படி அறிவிக்கக்கூடிய வேறு செலவினங்கள். அதாவது, ஆளுநரின் பரிந்துரை இல்லாத எந்த மான்ய கோரிக்கையையும் கவுன்சில் முன் வைக்க முடியாது.
இலங்கையின் குடியரசுத் தலைவர் ஏதாவது, ஒரு மாகாணத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக கருதினால் ஒரு பிரகடனத்தை வெளியிட்டு நிதிநிலையை ஒழுங்குப்படுத்தக்கூடிய ஒழுங்குமுறை விதிகளை மாகா ணஆளுநருக்கு அறிவிப்பார். ஆக, மாகாண கவுன்சிலின் நிதி தொடர்பான அதிகாரங் கள் முழுவதும் ஆளுநரிடமும், குடியரசுத் தலைவரி டமுமே தங்கியுள்ளன.
இவைகூட நிலையானது அல்ல. இந்த 13வது அரசியல் சட்டத்திருத்தத்தில் இலங்கை நாடாளு மன்றம் எந்த மாற்றங்களையும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு கொண்டு வந்து மாற்றிக் கொள்ள முடியும். பொதுவாக அரசிய லமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிபந்தனை கூட இதற்குக் கிடையாது. இலங்கை நாடாளு மன்றத்தில் ஒரு வாக்கு அதிகம் பெற்றுகூட இந்தத் திருத்தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இந்த 13வது சட்டத் திருத்தத்திலேயே இலங்கை நாடாளுமன்றம் மெஜாரிட்டி ஆதரவுடன் திருத்தங்களைக் கொண்டு வந்துவிடலாம். ஆக - 13வது சட்டத்திருத்தம் என்பது தமிழர்களுக்கு உரிமை வழங்கும் சட்டத் திருத்தம் அல்ல. சிங்களர்கள் - தமிழர்கள் மீது நடத்தும் அரசியல் விளையாட்டு, இந்த ‘சட்டத்திருத்தம்’ என்ற நாடகத்தின் காட்சிகள் எப்போதும் எந்த வடிவிலும் மாற்றங்களை எடுத்துக் கொண்டிருக்கும்.
1983 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் 6வது திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அது இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘குரலை’ நெரிக்கும் திருத்தம். இதன்படி தமிழர்களுக்கு தனித்தாயக உரிமை வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்றத் துக்குள்ளேயோ அல்லது வெளியேவோ பேசினால், அவர்கள் பதவி பறிக்கப் பட்டுவிடும். சர்வதேச நீதிமன்றத்தால் இந்த சட்டத்திருத்தம் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. இப்போது 13வது திருத்தத்தின்படி மாகாண கவுன்சில் உறுப்பினர்களும், அமைச்சர்களும் இந்த 6வது சட்டத்தின் கீழ் தான் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு உருவான ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம்கூட - தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளை ‘தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழும் பிரதேசம்’ (hயஎந நெநn யசநயள டிக hளைவடிசiஉயட hயbவையவiடிn) என்பதை அங்கீகரித்தது. பிறகு - அந்த அங்கீகாரத்தையே கூடுதலாக ஒரு விளக்கத்தை இணைத்து பலவீனப்படுத்திவிட்டார்கள். ‘தமிழர்கள் வரலாற்றுப் பகுதி’ என்பதோடு - கூடுதல் விளக்கமாக “நீண்டகாலமாக தமிழர்களும் இந்த எல்லைப் பகுதியில் பிற இனக்குழுக்களோடு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர்” என்ற பிரிவை இணைத்துக் கொண்டு விட்டார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சிங்களர்களைப்போல் ‘இன வாதம்’ பேசியவர்கள் அல்ல. இனத்துக்கான உரிமையைத்தான் கேட்டார்கள். 1985 இல் அனைத்து தமிழ்ப் போராளி குழுக்களும் பங்கேற்ற இலங்கை அரசு பிரதிநிதிகளுடன் இந்தியாவின் ஏற்பாட்டில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழர்கள் ஒருமித்து முன்வைத்த கோரிக்கையில் நான்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
1. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களை ஒரு தேசமாகவோ, தேசிய இனமாகவோ அங்கீகரிக்க வேண்டும்.
2. அவர்களுக்கு பாரம்பர்ய பிரதேசம் இருப்பதை அங்கிகரிக்க வேண்டும்.
3. அவர்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
4. இலங்கைத் தீவை தங்களது தேசமாகக் கருதுவோர் தமிழர் குரலுக்கு குடி மக்களுக்கான உரிமைகளையும், அவர்களுக்கான அடிப்படை உரிமை களையும் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த நான்கு அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு,இலங்கை அரசு முன் வைக்கும் எந்தத் தீர்வுத் திட்டத்தையும் பரிசீலிக்கத் தயார் என்றுதான் தமிழர்களின் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முன் வந்தனர். அப்படி நிபந்தனை வைத்த குழுக்கள்தான் - இப்போது அனைத்து உரிமைகளையும் உதறிவிட்டு, இலங்கைக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்து, அதன் அமைச்சரவையிலும் இடம் பிடித்துக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை நின்று இன்று இராணுவத்துக்கு ஆள்காட்டி வேலை செய்யும் துரோகத்திலும், மான வெட்கமின்றி இறங்கியுள்ளனர். இந்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது. மக்கள் மன்றத்தில் இவர்கள் அவமானப்பட்டு நிற்கிறார்கள். இவர்களை இந்திய உளவு நிறுவனங்களும், பார்ப்பன ஊடகங்களும் தலை மீது தூக்கி வைத்துக் கூத்தாடுகின்றன. நாம் எதற்காக, இதைக் குறிப்பிடுகிறோம் என்றால், தமிழர்கள் ஒருபோதும் சிங்களர் வாழும் தேசப் பகுதிக்கு உரிமை கொண்டாடியது இல்லை. ஒட்டு மொத்த இலங்கையையும் தமிழர்கள் ஆண்ட வரலாறுகள் உண்டு என்றாலும்கூட, அதன் பிறகு உருவாக்கிக் கொண்ட சிங்களர்களின் தனி தேசத்தை, தமிழர்கள் அங்கீகரிக்க மறுக்கவில்லை. தமிழ் ஈழத்துக்குப் போராடிய போராளிகள், விடுதலைப்புலிகள் சிங்களப் பிரதேசத்தின் மீது போர் தொடுக்கவும் இல்லை. இ°ரேல் பால°தீனத்தை ஆக்கிரமித்ததுபோல் ஒரு காலத்திலும், அவர்கள் சிங்களப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவும் இல்லை.
மாறாக - தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பை அடக்குமுறையை எதிர்த்துத்தான் போராடினார்கள். தமிழர்கள் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கும் அதே நேரத்தில் சிங்களர்கள் தமிழர்களின் தேசியத்தை அங்கீகரிக்கவே தயாராக இல்லை என்பதே உண்மை. சிறீலங்கா தேசியத்தை முன் வைத்து தமிழர்களின் தனித்த தேசியத்தை அங்கீகரிக்க மறுத்தார்கள். அந்தப் பார்வையோடு தங்களின் அரசியல் சட்டத்தையும் உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். இலங்கை அரசின் சட்டம் ஒற்றையாட்சியையே முன் வைக்கிறது.
இரு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதை அங்கீகரிக்க மறுக் கிறது. இந்த ‘ஒற்றை ஆட்சி’ என்ற சட்டத்துக்குள் சிங்களர் பேரினவாதத்துக்கு தமிழர்கள் அடிபணிந்து வாழ்வதை சட்டபூர்வமாக்கும் ஒரு முயற்சிதான் 13வது சட்டத்திருத்தம் என்பதைத் தவிர, இது, தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கிடும் திருத்தமல்ல. எவருடனும் இதை நாம் விவாதிக்கத் தயார். உரிமைகளை மறுத்துவிட்டு, உரிமைகளற்ற நிர்வாகங்களை மட்டுமே பகிர்ந்தளிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை ஊடகங்கள் விவாதத்துக்கு உட்படுத்தவில்லை. ஆனால், ஏதோ ‘13வது சட்டத் திருத்தம்’ என்ற ‘அலாவுதீன் அற்புத விளக்கை’ இலங்கை தமிழர் களுக்கு வழங்க தயாராக காத்துக் கொண்டிருப்பது போலவும், விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமாக ராணுவ நடவடிக்கைகளிலே ஈடுபட்டு தோல்வியைத் தழுவியது போலவும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் - இந்திய உளவுத்துறையிலும் பார்ப்பனிய ஊடகங் களாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதை தமிழர்கள் உணர வேண்டும்.
ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:
இந்நிலையில் தெற்கு ரொடீசியாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இயான் சிமித், பிரித்தானி யாவிடம் தெற்கு ரொடீசியா வுக்கான விடுதலையைக் கோரினார். ஆனால், பிரித்தானிய அரசாங்கமோ, பூர்வகுடி கறுப்பின பெரும் பான்மையினரின் ஆட்சி ஒப்படைக்கின்ற போதுதான் சுதந்திரம் பற்றி பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது.
இதனால் குடியேற்றப்பட்ட வெள்ளை இன மக்களின் சார்பில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் தெற்கு ரொடீசியா ஒருதலைபட்சமான சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டது. இயான் ஸ்மித் தன்னை பிரதமராக அறிவித்தார். ரொடீசி யாவின் இந்தப் பிரகடனத்துக்கு முன்னோடிப் பிரகடனமாக அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை ஸ்மித் சுட்டிக்காட்டினார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் பொது நலவாய சபையும் இதனை எதிர்த்தன. அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல்முறையாக ரொடீசியா மீது 1968 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. இதனிடையே தடை செய்யப்பட்ட இயக்கங்கள், கொரில்லா யுத்தங்களைத் தொடங்கின.
தென்னாப்பிரிக்க நாடு, ரொடீசியா மீது கரிசனை காட்டியபோதும் அங்கீகரிக்க வில்லை. 1979 ஆம் ஆண்டு நார்வேயில் இருந்த தனது மகனின் திருமணத்தில் பங்கேற்க தெற்கு ரொடுசியாவின் பிரதமராக அறிவித்துக் கொண்ட °மித்துக்கு நார்வே அரசாங்கம் அனுமதி அளிக்கவும் மறுத்தது. ஒருதலை பட்சமான சுதந்திரப் பிரகடனத்துக்கு பின்னர் அனைத்துலகத்திலிருந்து தெற்கு ரொடீசியா தனிமைப்படுத்தப்பட்டதாக மாறியது. அனைத்துலக நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சியில் 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இனப்பாகுபாடற்ற தேர்தல் நடத்த தெற்கு ரொடீசிய அரச தலைவராக இருந்த ஸ்மித் ஒப்புக் கொண்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்மித்தின் நிறவெறி அரசாங்கத்தை பூர்வகுடி கறுப்பின மக்கள் தூக்கியெறிந்தனர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்கர்கள் தேசிய ஒன்றியத்தின் தலைவர் முகபே வெற்றி பெற்று தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளார். தெற்கு ரொடீசியா, மீண்டும் ஜிம்பாப்வே என்ற பெயர் மாற்றம் அடைந்தது.
கடங்கா
காங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மாகாணம் கடங்கா என்பதாகும். காங்கோ அரசாங்கமானது கடங்காவுக்கு 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூடுதல் சுதந்திரத் துக்கான அனுமதியை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடங்கா, தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு பெல்ஜியம் ஆதரவளித்தது. இதனிடையே 1961 ஆம் ஆண்டு காங்கோவின் பிரதமர் லூமூமாம்பா படுகொலை செய்யப் பட்டார். லூமூமாம்பாவின் மரணத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டப் பட்டது. 1962 ஆம் ஆண்டு ஐ.நா. படை, கடங்கா மீது தாக்குதல் நடத்தியது. 1963 ஆம் ஆண்டு கடங்காவின் தனிநாட்டுப் பிரகட னத்தை ஐ.நா. முடிவுக்கு கொண்டு வந்தது.
மினெர்வா
1852 ஆம் ஆண்டு பசிபிக் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு மினெர்வா. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இத்தீவை ஆக்கிரமித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் தன்னை ஒரு சுதந்திர நாடாக மினெர்வா பிரகடனம் செய்தது. சொந்த நாணயத்தையும் அது உருவாக்கியது. மினெர்வாவின் சுதந்திரப் பிரகடனம் குறித்து அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டோங்கா, பிஜி உள்ளிட்டவை விவாதித்தன. இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள், டோங்கா நாட்டு மக்களின் மீன்பிடித்தளமாக மினெர்வா இருப்பதாகவும் மினெர்வா மீது தமது நாட்டுக்கே உரிமை இருப்பதாகவும் டோங்கா அரசாங்கம் வெளியிட்டது. தற்போது வரை மினெர்வா விடுதலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வடக்கு சைப்ரசின் துருக்கிய குடியரசு
பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து சைப்ர° 1960 ஆம் ஆண்டு ஆக°ட் 16 ஆம் நாள் விடுதலை பெற்றது. அந்நாட்டில் கிரேக்க சைபீரியர்கள் 80 விழுக்காட்டினரும் துருக் கிய சைப்ரீயர்கள் 18 விழுக்காடும் உள்ளனர்.
1963 ஆம் ஆண்டு அந்நாட்டு முதலாவது அரச தலைவர் ஆர்ச்பிசம் மகாரிய°, 13 அரசியல் சட்ட திருத்தங்களை பரிந்துரைத் தார். ஆனால் இத்திருத்தங்களை துருக்கிய சைபீரியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து சைப்ர° அரசாங்கத்துக்கும் சைபீரிய துருக்கியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை 1965 ஆம் ஆண்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சைப்ரஸ் மீது 1974 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் துருக்கி தாக்குதல் நடத்தியது. 1960 ஆம் ஆண்டைய அரசியலமைப்பு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த துருக்கி அழுத்தம் கொடுத்து இத்தாக்குதலை நடத்தி யது. அதன் பின்னர் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அப்பேச்சுக்கள் தோல்வியடைய சைப்ரசுக்குள் துருக்கியப் படை உள் நுழைந்தது. 37 விழுக்காட்டு பிர தேசத்தை துருக்கி ஆக்கிரமிக்க இலட்சக் கணக்கான கிரீக் சைபீரியர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளன்று வடக்கு சைப்ரசில் துருக்கிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் 541 ஆம் தீர்மானத்தின்படி 1983 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இந்தப் பிரகடனம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு சைப்ரசி லிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது. துருக்கி மட்டுமே அந்நாட்டை அங் கீகரித்தது. சைப்ர° நாட்டை குறிப்பிடுகை யில் “கிரீக் சைப்ரஸ் நிர்வாகப் பகுதி” என்றே இன்றளவும் துருக்கி குறிப்பிட்டு வருகிறது.
நாகாலாந்து
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாகாலாந்துக்கு பிரித்தானியர்கள் 1832 ஆம் ஆண்டு சென்றனர். அது வரை எந்தவித அன்னிய தலையீடு இல்லாமல் சுதந்திர நாடாக நாகா பிரதேசம் இருந்து வந்தது. பிரித்தானிய இந்திய நிர்வாகத்தில்கூட நாகாலாந்து இணைக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் களில் ஒருவரான காந்தியை நாகா ழுழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். நாகா தேசிய இனமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை படைத்தவர்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை காந்தியார் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாளன்று நாகலாந்து சுதந்திர நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது. 1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகாலாந்து நாட்டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் உருவானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்த நாகாலாந்துக்கு இந்திய ஒன்றியத்தில் இணையுமாறு பகிரங்க அழைப்பையும் இந்தியா விடுத்தது. இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாளன்று நாகாலாந்து தேசிய சபையானது பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. 99.9 விழுக்காடு நாகா தேசிய இனமக்கள், இறைமையுள்ள நாகா சுதந்திர அரசாங்கத்துக்காகவே வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்து தனிநாட்டு அரசாங்கத் துக்கான இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1960களில் நாகாலாந்தை இந்தியா ஆக்கிரமித்து தனது மாநிலங்களில் ஒன்றாக்கிக் கொண்டது. நாகா லாந்தின் சுய நிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா. சபையைப் போன்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளின் ஒன்றியத்தில் நாகா விடுதலை அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலி°ட் கவுன்சில் இணைந்து கொண்டது.


(நிறைவு)

வியாழன், 25 ஜூன், 2009

ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்

ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:
ஐ.நா. தோன்றுவதற்கு முன் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்.
°காட்லாந்து : 1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதியற்ற தாக்குதல்களி லிருந்து தற்காத்துக் கொள்ள °காட் லாந்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகட னத்தைத் தொடர்ந்து இரு நாடு களிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசரணை யாளராக செயற்பட்டு பேச்சுவாத்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து °காட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல்கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.
லத்தின் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள் : 1800 களின் தொடக்கத்தில் பிரெஞ்சு புரட்சி மற்றும் அமெரிக்க புரட்சிக் கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டன.
1810 மே 25 ஆம் நாளன்று °பெயி னின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சு படையணிகள், இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசாங் கத்தை அமைத்தது. அதனுடன் இணைந்து கொள்ளுமாறு இதர °பெயின் காலனி நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது.
அப்போதைய °பெயின் காலனி நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. பிரெஞ்சினது கோரிக்கையை நிராகரித்த பராகுவே 1811 ஆம் ஆண்டு “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” அறிவித்தது.
1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாளன்று அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டது. அர்ஜெண் டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண்டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.
1822 ஆம் ஆண்டு போர்ச்சுகலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளி யிட்டது.
1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.
1828 ஆம் ஆண்டு அர்ஜென்டினா - பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் ஊருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது.
மத்திய அமெரிக்க நாடுகள் : ஐக்கிய அமெரிக்க நாடுகள் உரு வானதைத் தொடர்ந்து 1823 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டது. இக்கூட்டமைப்பில் கோ°டா, ரிக்கா, எல் சல்வடோர், கௌதமாலா, ஹோண்டுரா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. ஆனால் இக்கூட்டமைப்பிலிருந்து,
1838 ஆம் ஆண்டில் நிக்கரகுவா தானே பிரிந்து செல்வதாக அறி வித்தது.
அதனைத் தொடர்ந்து ஹோண்டு ரா° மற்றும் கோ°ரா, ரிக்கா ஆகிய நாடுகளும் பிரிந்து சென்றன.
இதனால் மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு 1840 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
எல்சவடோவர் நாடு தன்னை தானே சுதந்திர நாடாக 1841 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்துக் கொண்டது.
எஸ்தோனியா: எஸ்தோனியா தேசிய இன மக்கள் வரலாறு நெடுகிலும் தங்களது சுய நிர்ணய உரிமையை மாறி மாறி அமைந்த வரலாற்றுப் பேரரசுகளிடம் இழந் திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருசியப் பேரரசின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்தது எஸ்தோனியா. 1917 ஆம் ஆண்டு ரசியப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் ருசிய இராணுவத்துக்கு எதிராக ஜெர்மன் வெற்றி பெற்ற நிலையில் எஸ்தோனியாவின் மூத்த குடிமக்கள் “எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனத்தை 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி24 ஆம் நாள் வெளியிட்டனர். அந்தப் பிரகடனம் “எஸ்தோனியா” தேயி இனத்தின் சுய நிர்ணய உரிமையை உலகுக்கு அறிவித்தது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட பின்னர், சுதந்திரத்தக்கான போரை 2 ஆண்டுகாலம் எஸ்தோனியா நடத்தி யது. 1920 ஆம் ஆண்டு ருசியாவுக்கு எதிரான எஸ்தோனியாவின் யுத்தம் வெற்றியடைந்தது. எஸ்தோனியாவின் இந்த சுதந்திர வரலாறு நீடித்ததாக இல்லை. 1940 ஆம் ஆண்டு சோவியத் ருசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1990களின் இறுதியில் சோவியத் ருசியா உடைந்து நொறுக்கியபோது தனது சுதந்திர காற்றை எஸ்தோனியா சுவாசித்தது. இருப்பினும் 1918 ஆம் ஆண்டு எஸ்தோனியா வெளியிட்ட “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனம் தான்” அந்நாட்டின் வரலாற்றில் சுதந்திர பிரகடன ஆவணமாக இடம் பெற்றுள்ளது.
பின்லாந்து: எஸ்தோனியாவைப் போலவே 1917 ஆம் ஆண்டு ருசியப் புரட்சியைத் தொடர்ந்து பின்லாந்தும் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாளன்று பின்லாந்தின் நாடாளுமன்றம் பின்லாந்தின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. அப்பிரகடனத்தை சோவியத்தின் உயர் நிர்வாக அமைப்பும் ஜெர்மனியும் °காண்டிநேவியன் நாடுகளும் டிசம்பர் 22 ஆம் நாளே அங்கீகரித்தன.
கினியா பிசாவு : மேற்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகீசிய காலனி நாடாக இருந்தது கினியா பிசாவு என்கிற நாடு. இதன் மொத்த மக்கள் தொகை 14 இலட்சம் பேர்தான். போர்த்துகீசியர்களின் அடிமை வர்த்தகத்துக்கான நாடாக இருந்த அந்நாட்டில் 1956 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்துக்கான ஆயுத போராட்டக் குழு உருவானது. அந்நாட்டின் சுதந்திரப் போருக்கு கியூபா உதவியது.
1973 ஆம் ஆண்டு விடுதலைக்காகப் போராடிய ஆயுதக் குழுவின் கட்டுப் பாட்டில் அந்நாட்டின் பெரும் பகுதிகள் வந்தன.
அதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் ஒருதலைபட்சமான சுதந்திரப் பிர கடனத்தை அந்நாடு வெளியிட்டது.
1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் 93க்கு 7 என்ற வாக்குகளில் அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனம் அங்கீகரிக்கப் பட்டது.
ஹைட்டி: பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்த ஹைட்டியானது 1805 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாளன்று தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே வெளியிட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாவது நாடாக சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது ஹைட்டி.
ஆனால், 1915 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த ஹைட்டியை ஆக்கிரமித்து அரசாட்சி செய்தது அமெரிக்கா. அதன் பின்னர் சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.
அமெரிக்கா : 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாளன்று அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை வெளி யிட்டது. வடஅமெரிக்காவில் பிரிட் டனுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 காலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப் பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒருமித்த பிரகடனம்” என்பதாகும்.
இன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கிய வர்கள், தோம° ஜெப்பர்சன், ஜோன் ஆதம்°, பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்.
இந்தோனேசியா : இந்தோனேசி யாவை நெதர்லாந்து ஆக்கிரமித்து, அங்கே தனது காலனி நாடாக டச்சு நாட்டை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக் குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டச்சு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த இரண்டே நாள்களில் 1945 ஆம் ஆண்டு ஆக°டு மாதம் இந்தோனேசியாவின் தேசிய வாதத் தலைவர் சுகர்னோ பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார்.
அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன பாணியில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இதே காலகட்டத்தில் நெதர் லாந்து மீண்டும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனால் ஆயுத மற்றும் இராஜதந்திர மோதல் கள் ஏற்பட்டன. இது 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தோ னேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை நெதர்லாந்து அங்கீகரித்தது.


ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:
கொரியா
ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துகள் ஜப்பானால் சூறை யாடப்பட்டன. 1900களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரி° அமைதி மாநாட்டில் சுய நிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாளன்று கொரி யாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்தப் போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி 1500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்றா சிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லிதுவேனியா
ஜெர்மனிய துருப்புகள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.
பிரகடனத்துக்குப் பின்னர் கொரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்
1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளன்று °பெயினின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால், பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும் °பெயினும் இதனை ஏற்க மறுத்தன.
1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்டம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப் பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியர சானது 1899ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் °பெ யினுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் °பெயின் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.
1899 ஆம்ஆண்டு அமெரிக்காவும் பிலிப் பைன்° குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.
இந்த யுத்தத்தின்போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கொரில்லா போர் முறையை கடைபிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப் பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, சில துரோகி களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 1901 ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்ப தாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்கா, 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது.
1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைபிடித்து வருகின்றனர்.
ஐ.நா. உருவான பின்னர்: வியட்நாம்
1887 இல் தென் கிழக்கு ஆசியாவில் வியட் நாம், கம்போடியா, லாவோ° உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோ சீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப் பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது இந்தோ சீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்சு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தோ சீனா ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஆக°ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.
இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாளன்று வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினருக்கும் வியட்நாமியர் களுக்கும் இடையே மோதல் உருவானது.
1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாளன்று பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலை கொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.
1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.
அதே ஆண்டுகளில் ருசியாவின் °டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ருசியா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.
கொரில்லா போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரக டனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழி வகுத்தது.
இஸ்ரேல்
1947 ஆம் ஆண்டு பால°தீனை இரண்டாகப் பிரித்து இ°ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இ°ரேல், ஒரு தலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப் பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ருசியா, இஸ்ரேலை அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் இ°ரேலை அங்கீகரித்தன.
பாலஸ்தீன்
1988 ஆம் ஆண்டு பால°தீன் விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பால°தீன தேசிய சபையானது பால°தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சமாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பாலஸ்தீன பிரதேசமும் இருக்க வில்லை. பாலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத் தில் பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்க வில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீ கரித்தன. பால°தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம், ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிக நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சி யும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
சோமாலிலாந்த்
அனைத்துலகத்தினால் அங்கிகரிக் கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பை யொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளன்று சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிறநாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென் பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.
1884 ஆம் ஆண்டில் சோமாலி லாந்த், பிரித்தானியாவின் ஆக்கிரமிப் புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு காலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலி ஆக்கிரமித்தது. பிறகு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமா லியா நாடு உருவாக்கப்பட்டது.
இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களது அபிலாசைகள் நிறை வேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் 1980களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிர°, சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.
1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் சட்டம் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.
சோமாலிலாந்த் அரசியல் சட்டப் படி, சோமாலிய மொழி ஆட்சி மொழியாகும். பாடசாலைகளிலும், மசூதிகளிலும் அரபி மொழி பயன் படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேறபட்ட அமைச்சுப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.
பெல்ஜியம், கானா, தென்னாப் பிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நார்வே, கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசி யல் உறவுகளைப் பேணி வருகிறது.
2007 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாளன்று சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.
அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத் தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற் கொண்டனர்.
எத்தியோப்பியாவின் பிரதமர், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமா லிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசு தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.
சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலி லாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர்.
(தொடரும்)

புதன், 15 ஏப்ரல், 2009

காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்!

காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு. • பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதிநிதி களுக்கு பிரிட்டிஷ் ஆளுநர்கள் தேனீர் விருந்து கொடுத்தனர். • காங்கிரஸ் தொடங்கப்பட்டது - சுதந்திரம் கேட்பதற்காக அல்ல. அப்போது நிர்வாகம் நடத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் அடக்குமுறைகளை எதிர்த்து எவரும் போரிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. எனவேதான் காங்கிரசைத் தொடங்கிய ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரியே அக்கட்சியின் செயலாளராக 20 ஆண்டுகாலம் இருந்தார். • ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் மாநாடும் தொடங்கும்போதும் - “பிரிட்டிஷ் அரசர் அரசிக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும்” என்று தீர்மானங்கள் போடுவது வழக்கம். 1886 இல் தொடங்கி 1914 வரை 8 மாநாடுகளில் இந்த ‘மன்னர் வழிபாட்டு’த் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. • கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ‘மன்னர் வழிபாட்டுத் தீர்மானம்’ தேவையா என்ற கேள்வி எழுந்தது, மாநாட்டுத் தலைவரான தாதாபாய் நவ்ரோஜி “இந்த ஜனசபை (காங்கிரஸ் மாநாடு) பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமையான அடித்தளம் (அளிதிவாரக்கல்) என்று பதில் தந்தார். • அப்போது - காங்கிரசுக்கு ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ‘காங்கிரஸ் அல்லது ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற பெயரில் க. சுப்ரமணிய அய்யர் என்ற காங்கிரஸ் தலைவர் ஒரு நூலையே எழுதியுள்ளார். • காங்கிரசைத் தொடங்கிய ஹுயும் அப்போது காங்கிரசில் பெரும் எண்ணிக்கையாக இருந்த பார்ப்பனர்களிடம் மதம், ஆச்சாரம், வர்ணஸ்ரமப் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினை களில் கட்சி குறுக்கிடாது என்று ஒவ்வொரு மாநாட்டிலும் உறுதி தந்து பேசினார். இதை ‘அம்பேத்கர் தனது சாதியை ஒழிக்க வழி’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். • சென்னையில் கூடிய காங்கிரஸ் மாநாடு பற்றி ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் காங்கிரஸ் ஒருவிளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், “இந்த வருடத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புதுஅம்சம் - சாதி ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் (பார்ப்பனர்களுக்கு) பிரத்தியேகமான ஒரு பங்களாவை அவர் களுடைய சாதி ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று அந்த விளம்பரம் கூறியது. • 1885 இல் நடந்த பம்பாய் காங்கிரசிலும் 1886 இல் நடந்த கல்கத்தா காங்கிரசிலும் ஒரு முளிலீம் பிரதிநிதிகூட பங்கேற்கவில்லை. காரணம் அப்போது பிரிட்டிஷாரை முழுமையாக எதிர்த்தது முளிலீம்கள்தான். ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்று பெயர் சூட்டிக் கொண்ட கட்சியில் எப்படி முளிலீம்கள் வருவார்கள்? • சென்னையில் கூடிய மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற 361 பிதிநிதிகளில் 138 பேர் பார்ப்பனர்கள். மற்றவர்கள், செட்டியார், ரெட்டியார், முதலியார் போன்ற முன்னேறிய சாதியினர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. கும்ப கோண சங்கர மடத்தின் சார்பில் சங்கராச்சாரி பிரதிநிதி கலந்து கொண்டார். • சமூகப் பிரச்சினையில் காங்கிரஸ் ‘தலையை நுழைக்காது’ என்ற கூறினாலும், சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை பார்ப்பனர் களுக்காக நிறைவேற்றினார்கள். • 1900க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் - காலையிலே இந்து மகாசபை மாநாடும், மாலை யில் - அதே மேடையில் காங்கிரஸ் மாநாடும் நடந்த வந்தன. காங்கிரசார் இரண்டு அமைப்பு களிலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர். • இதற்குப் பிறகுதான் 1906 இல் முஸ்லீம்கள் தங்களுக்கு என்று ‘அகில இந்திய முளிலீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். • வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டு மாகாணமாக பிரிட்டிஷார் பிரித்தபோது அதை எதிர்த்து ‘அய்க்கிய வங்காள இந்து இயக்கத்தை’ தொடங்கியது, காங்கிரசார் தான். அதே ஆண்டில் பஞ்சாபில் இந்து மகாசபையை காங்கிரசார் உருவாக்கி னார்கள். இதுவே பிறகு அகில பாரத இந்து மகா சபையாகியது. ஆக, அரசியலில் மதவாதத்துக்கு கால்கோள் நடத்தியதே காங்கிரஸ் தான். • லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து மகாசபைக்கும் தலைவர்களாக இருந்தனர். இருவருமே மோசமான வர்ணஸ்ரம வெறியர்கள். முளிலீம் எதிர்ப்பாளர்கள். ‘கடல் தாண்டுவது இந்துமத விரோதம்’ என்பதால், லண்டன் வட்ட மேஜை மாநட்டுக்கு சென்ற மதன் மோகன் மாளவியா, தன்னுடன் மண்ணை உருண்டையாக உருட்டி கையில் எடுத்துச் சென்றார். மண்ணை கையில் எடுத்துச் சென்றால், கடல் தாண்டி போனதாகாது என்பது அய்தீகமாம்! எனவே அவர் ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றும் அழைக்கப்பட்டார். • இப்போது - சென்னை காங்கிரஸ் அலுவலகம் ‘சத்திய மூர்த்தி பவனில்’ காங்கிரசார் கூடினாலே அங்கு கலவரம் வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உண்மையில் காங்கிரசின் வரலாறே அப்படித்தான் இருந்திருக்கிறது. சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட திலகர் தலைமையிலான ‘இந்து வெறியர்’ குழு கலவரத்தில் இறங்கியது எதிர்ப்பு அணி. திலகர் மீது செருப்பு வீசியது. பெரும் கலவரத்தினால் எந்த முடிவும் எடுக்காமல், மாநாடு கலைந்தது. அதன் பிறகு ஓராண்டு காலம் காங்கிரஸ் கூடவே இல்லை. அரசியலில் ‘செருப்பை’ ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை, அப்போது தான், காங்கிரசார் உலகத்துக்கே அறிமுகப்படுத்தினர். • பொது மக்களிடம் திரட்டிய நிதிக்கு கணக்கு காட்டாமல் விழுங்கி ஏப்பம் விடும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் தான். ‘திலகர் சுயராஜ்ய நிதி’ திரட்டி, கடைசி வரை காங்கிரஸ் அதற்கு கணக்கே காட்ட வில்லை. அதே ‘திலகர்’ நிதியை காந்தியார் வசூல் செய்தார். வசூல் செய்த பலரும் பணத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் இப்போதும் “வசூல் பணம் என்னவா யிற்று?” என்று எவராவது கேட்டால் ‘காந்தி கணக்கில் எழுது’ என்று கூறும் வழக்கு உள்ளது. இது பொது வாழ்க்கை “ஒழுக்க”த்துக்கு காங்கிரஸ் வழங்கிய ‘அருட்கொடை’. • அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்தான். ‘பிள்ளையாரை’ அரசியல் குறியீ டாக்கியவரும் அவர்தான். சைவ - வைணவப் பிரிவுகளை ஒருங்கிணைக்க அவர் விநாயகனைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘விநாயகர்’ ஊர்வலங்களை மராட்டியத்தில் நடத்தினார். அதைத் தான் இப்போது இந்து முன்னணி நடத்திக் கொண்டிருக்கிறது. • புனே நகரத்தில் எலிகளால் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் உயிரிழந்த போது நோயைத் தடுக்க எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அப்போது விநாயகன் வாகனம் எலி. எனவே எலியை ஒழிப்பது இந்து மத விரோதம் என்று கூறினார் திலகர். இதனால் எலியை ஒழிக்க வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டு 18 மாதம் சிறைபடுத்தப்பட்டார். • ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதை எதிர்த்த திலகர், பெண்களுக்கு கல்வி தருவதையே எதிர்த்தார். குழந்தை திருமணங்களை (பால்ய விவாகம்) தடை செய்யும் சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டு வந்தபோது மதத்தில் தலையிடுவதாகக் கூறி, கடுமையாக எதிர்த்தார். • சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் உரிமை கோரியபோது 1918 இல் திலகர் இவ்வாறு பேசினார்: “எதற்காக, செருப்பு தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவனும், சட்டசபைக்குப் போக முயற்சிக்கிறார்கள்? யார், யார் எங்கே போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா?” - இந்த நிகழ்வுகளை அம்பேத்கர் தனது நூலில் (காந்தியும் - காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? நூலில்) பதிவு செய்துள்ளார். • அரசியலில் மதத்தைப் புகுத்தியதில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு. ‘ராம பஜனையோடு’ அவரது அரசியல் நடவடிக்கைகள் கலந்து நின்றன. தனது ‘அந்தராத்மா’வுடன் அடிக்கடிப் பேசுவதாக அவர் கூறிக் கொண்டார். இந்தியாவில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும் என்றார். ‘தீண் டாமை’ ஒழிய வேண்டும். ஆனால், நால்வர்ணப் பிரிவாகிய வர்ணாளிரம அமைப்பு நீடிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு ‘வர்ணமும்’ தங்களுக்குரிய தொழிலை செய்வதே நல்லது என்றார். • ‘தீண்டப்படாத’ தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்த போது அதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. மிரட்டலுக்கு பிரிட்டிஷ் அரசு பணிந்தது. தலித் மக்களுக்கு கிடைத்த உரிமையை காந்தி பறித்தார். • மயிலாப்பூரிலுள்ள சீனிவாச அய்யங்கார் என்ற பிரபல காங்கிரசார் வீட்டில் காந்தி தங்குவது வழக்கம். அப்போதெல்லாம் அவர் வீட்டுத் திண்ணையில்தான் காந்திக்கு இடம்; உள்ளே போக முடியாது; இதை காந்தியே கூறியிருக்கிறார்.

செவ்வாய், 3 மார்ச், 2009

விலங்கிடுவது கைக்கா? வாய்க்கா?

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதிகள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி, தேர்தல் திருவிழா கனஜோரில் தொடங்கிவிடும்.

தமிழகத்தில் வரும் மே 13ஆம் தேதியன்று, இறுதி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களத்தை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது. 

இனி வரும் நாட்களில் கோடை வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பரப்பில் இலங்கை தமிழர் பிரசனையை நமது அரசியல் கட்சிகள் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிடும். (அடுத்ததாக தேர்தல் வரும் போதுதானே அவர்களுக்கு இந்த 'ஆயுதம்' தேவைப்படும்.)

உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம், முத்துகுமாரர்களின் மரணம் எல்லாம் தேர்தல் களேபரத்தில் காணாமல் போய்விடும். 

ஆயினும் ஈழத்தின்பால் உண்மையான பற்றுள்ள சில தலைவர்கள், தேர்தல் பிரச்சாரத்தையும் மீறி இலங்கை விவகாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்களோ என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது. 

காரணம், இத்தேர்தலில் இலங்கை விவகாரம் நிச்சயம் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆளும் தி.மு.க.வும் காங்கிரஸும் நன்கு உணர்ந்துள்ளன. அதன் எதிரொலியாகத் தான் தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்குக் கூட வலைவீசப் பார்க்கிறது காங்கிரஸ்.

உலகத் தமிழர்களுக்கே தான் மட்டும் தான் நம்பகமான ஒரே தலைவர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க.வோ, ஈழப் பிரச்னையால் கணிசமான வாக்குகளை இழக்க நேரிடலாம் என்ற அச்சத்தில் உள்ளது. 

எனவே, இலங்கை விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு போகக் கூடாது என்பதில் அது உறுதியாக உள்ளது. அதற்காக அறிவிக்கப்படாத கைது நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வரும் இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த தமிழக அரசு, அதன் பிறகு வைகோவையும் கைது செய்து உள்ளே தள்ளியது. (அவர் தற்போது பிணைய விடுதலையில் வெளியே வந்துவிட்டார் என்பது வேறு விஷயம்) வைகோ மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயலாம் என்றே கூறப்படுகிறது.

இத்துடன் நிற்கவில்லை. திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில், தே‌சிய ஒருமை‌‌ப்பா‌ட்டு‌க்கு‌ எதிராகப் பே‌சியதாக, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியையும் கைது செய்து 'உள்ளே' வைத்துவிட்டது தமிழக அரசு. 

தமிழக காவல்துறையினர் விலங்கிடுவது தலைவர்களின் கைகளுக்கா? அல்லது அவர்களின் வாய்க்கா? அடுத்த கைது யார்? பழ. நெடுமாறனா? அல்லது தொல் திருமாவளவனா? 

-வெப்துனியா

சனி, 21 பிப்ரவரி, 2009

யாரா இருக்கும் அது?





hc-clash26




’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை

  • தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன.பல தொழிலாளர்கள் வேலை இழப்பு.
  • உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு.

  • வீட்டு வாடகை, நிலம், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதி.
  • டாஸ்மாக் மதுக்கடைகளினால் பல குடும்பங்கள் சீரழிவு.

  • அரசு பேருந்துகளில் மறைமுக விலையேற்றம்.
  • ராஜா என்கிற தமிழக அமைச்சர், ஈரோட்டில் நிலமோசடி வழக்கில் ஈடுப்பட்டார், என்பதால் அமைச்சர் பதவி பறிப்பு.
  • திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த மக்கள், முறையான கூலி கேட்டு மறியல் செய்த போது அவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு.

  • ஈழத் தமிழர்களை கொலை செய்யும், சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி. தமிழர்கள் தீக்குளிப்பு. தமிழகம் கொந்தளிப்பு.  தமிழகஅரசின் மெத்தனம்.

  • ‘ஈழத்தமிழர்களுக்கு எதிரானப் போரை நிறுத்து’ என்ற பொதுநோக்கில் தங்கள் நலன்களைப் புறம் தள்ளி தமிழர்களுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது தமிழக போலிசாரின் கொலைவெறித் தாக்குதல். படுகாயமுற்ற வழக்கறிஞர்கள் மீதே, கொலை முயற்சி வழக்கு.

ஆமாம், யாரா இருக்கும் அது?

அதாங்க, முதல்வர் சொல்லி இருக்கிறாரே,  ‘தமிழக அரசுக்கு எதிராக சதி பண்றாங்க’ என்று.  அதுதான் யாருன்னு தெரியிலையே?

-வே. மதிமாறன்

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் - தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது...



அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தணடித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தினான். அதைக்கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் ராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் - நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தல் யரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றிவந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனைநோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா-? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத்தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலை தூரத்து அயோத்தியில் அகாலமரணமைடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன், ராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். ……………………………………………. சம்பூகனை கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் ராமனுக்குப் பரிசாய் அளித்தான்.’ - அயோத்தியில் நடந்த ராமனின் ஆட்சியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர். *** ‘சுப்பிரமணிய சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர், தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார் என்பதால் சில வழக்கறிஞர்கள் அவரை அடித்துவிட்டார்கள்’ என்று சொல்லப்பட்டது. உடனே, பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் யாருக்கும் (பார்ப்பனர்களுக்கு) பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியை உடனடியான கலைக்க வேண்டும்.” என்று மனம் போனபடி, பழித்தார்கள், சபித்தார்கள். மருத்துவனையில் இருக்கும் முதல்வர் சு. சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர் மீது நடந்த தாக்குதலை நினைத்து மிகவும் மனம் வருந்தி, தனது அறிவார்ந்த குழுக்களிடம், கலந்தாலோசித்து இருக்கிறார். பிறகு அதன் விளைவு, சென்னை உயர்நீதி மன்றத்தில், சரியாக மூன்று மணிக்கு ஆரம்பித்திருக்கிறது. சுப்பிரமணிய சுவாமியை உண்மையில் தாக்கினார்களா? தாக்கியது இந்த வக்கீல்கள்தானா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி ஏறக்குறை 1000 அதிரடி ‘காவல்’ துறையினரால், வழக்கறிஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டார்கள். தலை, கால், கை உடைந்து பல வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டார்கள். வழக்கறிஞர்களைத் தாக்கிய ‘காவல் துறை’ யின் இந்த ‘நற்செயலை’ பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள் பாராட்டி மலர் தூவி வாழ்த்துகிறார்கள். சம்பூகனை கொன்றதும் உயர்தெழுந்த பார்ப்பனச் சிறுவனைப் போல், வழக்கறிஞர்கள் மீது போலீஸ் கொலை வெறி தாக்குதல் நடத்தி முடித்த உடன், சுப்பிரமணிய சுவாமி, மகிழ்ச்சி அடைந்து, காவல்துறையின் ‘நற்செயலை’ பாராட்டியும், வழக்கறிஞர்களை ‘மாமா பயல்கள்’ என்றும் என்று கண்ணியமான வார்த்தையாலும் பேசியிருக்கிறார்.(சி.என்.என். தொலைக்காட்சி) நடிகர் ‘சோ’ அகத்தியனைப்போல் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். தெய்வ மகிமையுள்ள 


காப்பை முதல்வரின் கையில், கட்டுவாரா? தெரியவில்லை. ராமாயண ஆட்சி அல்லது காட்சி மீண்டும் நடந்திருக்கிறது சில ஆண்டுகளுக்கு முன்னால், முதல்வர் ஸ்ரீராமனை, கடுமையாக விமர்சித்துவிட்டார் என்று வேதாந்தி என்கிறவன், அவர் தலையை வெட்டச் சொன்னான். ஸ்ரீராமன், தன்னை தானே விமர்சித்து பேசிக் கொள்வதற்குக்கூடவா உரிமையில்லை. சாட்சாத் ஸ்ரீராமபிரான்தான் தமிழகத்து முதல்வராக இருக்கிறார். முட்டாள் வேதாந்தி. நீ என்ன ராம பக்தன்?. -வே. மதிமாறன் 

திங்கள், 16 பிப்ரவரி, 2009

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்


mc21


mc11

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர்.
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து வீரச்சாவடைந்த “வீரத் தமிழ் மகன்” முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

“தேனிசை” செல்லப்பா எழுச்சி இசையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் அமர்நாத், இயக்குநர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில்,

இந்திய இராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிப்பதற்கு ராஜீவ் காரணமாக இருந்ததையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்குப் பிறகு கொழும்பு சென்ற ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கி கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையும் எடுத்துக் காட்டினார்.

தமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் டெல்லிக்கு கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே என்றும் தோழர் மணியரசன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் காப்பதற்குத்தான் டில்லிக்கு அனுப்பினோமே தவிர, டில்லியின் துரோகத்தை தமிழ்நாட்டில் நியாயப்படுத்துவதற்கு அல்ல என்றும், காங்கிரசின் துரோகத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே இனி தமிழின உணர்வாளர்களின் எதிர்கால வேலைத் திட்டம் என்று கூட்டத்தில் தலைவர்கள் அறிவித்தபோது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆரவாரம், கரவொலி எழுப்பியதோடு காங்கிரசை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில்,

ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலிட்டுக் கூறியபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன் ஆற்றிய உரையில்,

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டினார்.

ஈழப் போராளி அமைப்புகளிடையே மோதல்களை உருவாக்கியது இந்திய உளவு நிறுவனம் தான் என்றும், இதை 1990 ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் கலைஞர், இப்போது விடுதலைப் புலிகள் சகோதர போர் நடத்துவதாக குற்றம் சாட்டுவது முரண்பாடு அல்லவா என்று கேட்டார்.

தமிழர் வரிப்பணத்தில் சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம் என்று  கேட்டுக் கொண்டார்.

திரைப்பட இயக்குனர் சீமான் ஆற்றிய உரையில்,

எத்தனை முறை கைது செய்தாலும் சீமானின் குரலை நசுக்கி விட முடியாது. தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.

இரு நாட்களுக்கு முன் புதுவையில் இயக்குனர் சீமான் ஆற்றிய உரைக்காக புதுவை காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரப்பரப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது.

அதே நாளில் சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டமும் நடைபெற்றது. பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் திரண்டவர்களை விட ஐந்து மடங்கு கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் கூட்டத்துக்கு திரண்டதாக “விண்” தொலைக்காட்சி தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி.

http://www.paristamil.com/tamilnews/?p=28280
 

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமானின் ஆவேச பேச்சு



ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், விடுதலை ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 

கார் எரிக்கிற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய காரை எரித்தவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் அய்யா தா.பாண்டியன் அவர்களின் காரை எரித்தவர்களை கைது செய்யாதது ஏன்?

நான் கலவரம் செய்வதாக புதுச்சேரி அரசு சொல்கிறது. கலகக்காரர் பெரியாரின் பேரன் நான். தமிழின எழுச்சிக்காக கலகத்தைச் செய்தேன். தமிழர்கள் ஜனநாயக வாதிகளாக இருக்கிறார்கள். முத்துக்குமாரும் ஜனநாயக வாதியாகத்தான் இருந்திருக்கிறான். அதனால்தான் தீக்குளித்தான். ஆனால் நாடு சொல்கிறது தமிழன் தீவிரவாதி என்று. 

முத்துக்குமார் தீவிரவாதி, நான் தீவிரவாதி ஆனால் என் காரையும், தா.பாண்டியன் காரையும் எரித்த காங்கிரஸ்காரன் தேசியவாதி. 

தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 

இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? 

இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது. 

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. 

7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும். 

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். 

எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார். 


நன்றி. நக்கீரன் இணையம்

http://www.nakkheeran.in

வலைப்பதிவு காப்பகம்