வெள்ளி, 17 செப்டம்பர், 2010

உறுதியேற்போம்....

அறியாமை இருளகற்றி

அறிவியல் வளர்க்க

உறுதியேற்போம்....

சாதி மறுப்புத் திருமணம் செய்து

சமத்துவம் படைக்க

உறுதியேற்போம்...

ஆணாதிக்கக் கொடுமையிலிருந்து

பெண்ணினத்தை மீட்டெடுக்க

உறுதியேற்போம்...

சாதி மத சழக்குகளிலிருந்து

தமிழர்களை விடுவிக்க

உறுதியேற்போம்....

அரசு தனியார் வேலைகளில்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய

பங்கை பெறுவதற்கு

உறுதியேற்போம்...

உலக வர்த்தக பேரத்தில்

உருக்குலையும் தமிழினத்தை

பாதுகாக்க உறுதியேற்போம்...

ஆரியப் பார்ப்பனர்

கொட்டங்களை

அடியோடு ஒழிக்க

உறுதியேற்போம்....

வடவர்களின் பிடியிலிருந்து

தமிழ்நாட்டை விடுவிக்க

உறுதியேற்போம்...

பார்ப்பன இந்திய சதியாலே

சர்வதேச துணையோடு

சிங்களம் அழித்த ஈழத்தை

மீட்டெடுக்க உறுதியேற்போம்...

தமிழ்நாடு தமிழருக்கேயென

அய்யா சொன்ன வார்த்தைகளை

உண்மையாக்க உறுதியேற்போம்...

பெரியார் பிறந்தநாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி-2010

தந்தை பெரியார் அவர்களின் 132 பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-9-2010 வெள்ளிக் கிழமை காலை 11-00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சாதி,மத மூடநம்பிக்கை ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார்,மாவட்டத்தலைவர் துரைசாமி,மாநகர்த் தலைவர் இரமேசுபாபு,மாநகரச் .செயலாளர் முகில்ராசு,ஒன்றிய தலைவர் அகிலன், மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன், அறிவரசு, சண்.முத்துக்குமார், அவிநாசியப்பன்,கருணாநிதி,கமல்,கார்த்தி,முரளி உட்பட மாநில,மாவட்ட,மாநகர,ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..

சனி, 4 செப்டம்பர், 2010

வீரவணக்கம்

சீரிய தமிழினப்போராளி
திருப்பூர் தென்மொழி துரையரசனார் அவர்கள் மறைந்தார்.அவருக்கு எமது வீரவணக்கம்