ஞாயிறு, 29 ஜூன், 2008

கடவுள் என்றால் என்ன?

நாங்கள் வந்து இந்தப்பிரச்சினையிலே கடவுளைக் கும்பிடாதீர்கள்
என்று சொல்லவில்லை! நன்றாக நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இந்தப்பிரச்சினையிலே கடவுளை கும்பிடாதீர் என்றுசொல்லவில்லை கடவுள் என்றால் என்ன? என்று சொல்லுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஒன்றுமேஇல்லாமல் நினைத்ததை எல்லாம் கடவுள் என்றால் என்ன அர்த்தம்? பல்லிகடவுள், பாம்புகடவுள்,அரசமரம் கடவுள்,வேப்பமரம் கடவுள்,ஓணான்கடவுள்,நாய்கடவுள்,நினைத்ததை எல்லாம் கடவுள் என்றால்,இது பைத்தியகாரச்சங்கதியா? கடவுள்சங்கதியா? இந்தப் பைத்தியகாரத்தனத்துக்குநமது பணம்,நமதுநேரம்,நமதுசக்தி எவ்வளவு செலவாகிறது?இவ்வளவுசெய்தும் நமக்கு தேவடியாள் மகன் என்ற பட்டம் அல்லவா கிடைக்கிறது.
தந்தைபெரியார். விடுதலை-19.12.1973