சனி, 7 ஆகஸ்ட், 2010

என்னடா தேசபக்தி

எதற்காக இந்தியா
புரிய வில்லை
எதைச்சொன்னாலும்
சொரணை யில்லை

நாடாளு மன்றம்
தமிழ் பேசாதாம்
நற்றமிழ், 'நீதி
மொழி' ஆ காதாம்!

யாரடா நாயே
இதை நீ சொல்ல
இந்திதான் நுழையுமா?
எம்மையே கொல்ல

பனிமலைக் காசுமீர்
தீப்பற்றி எரியுது
ஒரிசா சதீசுகர்
கோவணம் கிழியுது

ஆந்திரா கன்னடம்
மராட்டியம் மோதுது
அட உன், தேசபக்தி
அடிபட்டுச்சாகுது

மீனவன் சாகிறான்
தடுக்க மாட்டாய்நீ
முள்வேலிக்கம்பியை
அறுக்க மாட்டாய் நீ

குட்டி நாடுதான்
அதட்ட மாட்டாய்நீ
கொழுத்துப் பேசுவான்
உதைக்க மாட்டாய்நீ

எங்கள் தாயரின்
தாலி ஏன் அறுக்கிறாய்?
இத்தாலிக்காய் ஏண்டா
தமிழனை எரிக்கிறாய்?


-தமிழேந்தி

நன்றி
சிந்தனையாளன்
ஆக .2010