செவ்வாய், 23 செப்டம்பர், 2008

பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 130-வது பிறந்த நாள் விழாவை இருசக்கர வாகன ஊர்வலம்,கொடியேற்றுவிழா,பொதுக்கூட்டம் என இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது 21-9-2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் திருப்பூர் வெள்ளியங்காட்டிலிருந்து கொடியேற்றிவைத்து இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. தென்னம்பாளையம்,டிகேடி,பழையபேருந்துநிலையம்,இரயில்நிலையம்,புஷ்பாதியேட்டர், சாமுண்டிபுரம், அநுப்பர்பாளையம்,புதியபேருந்துநிலையம்,கொங்குமெயின்ரோடு,மங்கலம்ரோடு, முருகம்பாளையம், உட்பட 45 இடங்களில் ஊர்வலம் சென்று கொடியேற்றி வைத்து இறுதியாக வீரபாண்டி பிரிவில் முடிவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கோபி.வேலுச்சாமி,கா.சு.நாகராஜ்,சூலூர் வீரமணி, தியாகு,கனல்மதி உட்பட முன்னணித்தோழர்கள் பேசினார்கள், இந்நிகழ்ச்சிகளுக்கு பெரியார்திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சு.துரைசாமி தலைமை தாங்கினார்.
இதேபோல் 22-9-2008 திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு இராயபுரம் பகுதியில் பெரியார்பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராயபுரம் ராசன் தலைமையில் நடைபெற்றது. பரிமளராசன்,கருணாநிதி, நீதிராசன்,கூரியர்பிரகாசு,ஆ.ரமேசு ஆகியோர் முன்னிலை வகிக்க அர.கிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மா.உமாபதி,ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்,இந்நிகழ்ச்சியில் மேலும் இல.அங்ககுமார்,சு.துரைசாமி,க.அகிலன்,முகிலரசு,சரவணமூர்த்தி,ஞா.கார்த்திகேயன்,திணேஷ்,மூர்த்தி,லாவண்யாஆகியோர் பேசினார்கள்.மன்னைதங்கம்,திருப்பூர்தியாகு ஆகியோர் பாடல்கள்பாட பரமேசுவரி நன்றிகூறினார்.

வலைப்பதிவு காப்பகம்