skip to main | skip to sidebar

பெரியார் தளம்

வெள்ளி, 28 நவம்பர், 2008

எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்




27-11-2008 மாவீரர் நாளை முன்னிட்டு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகராட்சி பத்மசிரீ திருமண மண்டபத்தில் "எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்! என்கிற தலைப்பில் ஈழ நிலைமைகளை விளக்கி 
கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், ம.தி.மு.க 
மாவட்டச்செயலாளர் ஆர்.டி. மாரியாப்பன்,இந்திய பொதுவுடமைக்கட்சியின் வட்டாரச்செயலாளர் 
கே.சி.ராதாகிருஷ்ணன்,பெரியார்திராவிடர்கழகத்தின் பொள்ளாச்சி மனோகரன்,கா.கருமலையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஈழத்தமிழரின் கண்ணீர் காட்சிகள் வீடியோ திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.  இந்தக் கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தோடு உடுமலை தமிழ்ச்சங்கம்,மற்றும் கொங்குமண்டல ஆய்வு மய்யம் ஆகிய அமைப்புகள்
இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 1:43 AM

வெள்ளி, 21 நவம்பர், 2008

விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி


கேள்வி: - காங்கிரஸ்காரர்கள், இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த இனத்தை மன்னித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளிடம் மட்டும் ஏன் வன்மம் கொண்டிருக்கிறார்கள்?

 

பதில்: - அப்படி அவர்கள் இன்னும் கோபம் கொண்டிருப்பதுகூட ஒரு விதத்தில் நியாயமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம் அசந்திருந்தால், துப்பாக்கியின் மட்டையாலேயே அடி வாங்கி, மண்டை பிளந்து, அதே ராஜீவ் காந்தி கோரமாக இறந்து போயிருக்கக் கூடிய ஒரு சம்பவம் கொழும்புவில் நடந்ததே, அப்படிப்பட்ட இந்திய விரோத சிங்கள பயங்கரவாதிகளைப்பற்றி ராஜீவ் விசுவாச காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம்கூட சுரணை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது.

(கொலை முயற்சி செய்த சிப்பாய் எப்போதோ வெளியே வந்து ஒரு ஹீரோ போல கோலாகலமாக கெளரவிக்கப்பட்ட விஷயம் எல்லாம் நம்முடைய லோக்கல் கதர்களுக்கு எட்டியிருக்குமா என்பது சந்தேகமே!).


இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 11:33 AM

வியாழன், 20 நவம்பர், 2008

சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்





atrocity

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை.

-எஸ். சௌமியா

அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி.

அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்.

நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சியே நம்மை இவ்வளவு திகில் அடைய வைக்கிறதே, மேலவளவு என்ற கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, ஓடுகிற பஸ்சில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் வித விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் ஒருபாவமும் அறியாத முருகேசன்.

அந்தக் கொலை வழக்கில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புரையின் சிறிய பகுதியை உங்களுக்குத் தருகிறேன்;

1. “ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?” என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).

2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).

3. “முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).

4. “சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).

5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).

6. “அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)

மனிதாபிமானம் கொண்ட எந்த ஜாதிக்காரர் இதைப் படித்தாலும் ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் படிக்க முடியுமா?

இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறதே….
இந்தக் கொலைகளையும் காட்சியாகத் தந்திருந்தால்…..

இந்த ஜாதிவெறிதான் தமிழனின் வீரமா?

தமிழனை பல்லவன் ஆண்டு இருக்கிறான். விஜயநகர மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள். மொகலாயர்கள் ஆண்டு இருக்கிறார்கள். வெள்ளையன் ஆண்டு இருக்கிறான் தமிழர்கள் அல்லாத பல நாட்டு மன்னர்கள் தமிழர்கள் மீது பல ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தியிருக்கிறார்கள், சுரண்டி இருக்கிறார்கள்
‘குற்றப்பரம்பரையினர்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்கள் உட்பட பலரும் கேவலப்படுத்தி அவமானப்படுத்தி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

அவர்களை எதிர்த்து வராத வீரம், ஒரு தாழ்த்தப்பட்டவர் பஞ்சாயத்துத் தலைவராக வரும்போது வருகிறதே? இந்த மோசமான மனநிலைக்கு பெயர் தான் தமிழனின் வீரமா?

ஜாதி படிநிலையில் தனக்கு மேல் உள்ளவர்கள் தன்னை அவமரியாதை செய்வதை, பொருட்படுத்தாமல் இருப்பதும், தனக்கு கீழ் உள்ளவர்கள் மேல் நிலைக்கு வருவதை பொறுத்துக் கொள்ளாமல் இருப்பதும்தான் ஜாதி இந்துவின் உளவியல். இப்படித்தான் ஜாதி சிஸ்டம் உயர்ஜாதிக்காரர்களுக்கு அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு எந்தப் பிரச்சினை இல்லாமல், ஜாதி ரீதியான சமூக அந்தஸ்த்தோடு இயங்குகிறது.

இடைநிலை ஜாதிகளுக்கு ‘சூத்திரன், வேசி மகன்’ என்ற பட்டங்கள் இருந்தாலும் அதைக் குறித்தான எந்த சொரணையும் இல்லாமல், பார்ப்பனியத்தின் மீது எந்த கீறலும் விழாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தனது காழ்ப்புணர்சியின் மூலமாக ஜாதி மேலாதிக்கத்தை, பார்ப்பனியத்தை பிற்படுத்தப்பட்ட ஜாதிகள்தான் மிகவும்  பத்திரமாக பாதுகாக்கிறது

 

murugesan_3401

மேலவளவு முருகேசனின் மனைவி பிணமான தன் கணவனுடன்

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை பார்த்தே உங்களால் ஒருநாள் முழுக்க சாப்பிட முடியவில்லை என்கிறீர்கள். மேலவளவு முருகேசன் கொலையைக் காட்சியாக்கிக் காட்டியிருந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவை மறந்துதான் வாழ்ந்து இருக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சண்டை காட்சிகளை திரும்ப, திரும்ப தொலைக்காட்சியில் காட்டப் படுவதால் மக்களிடம் தேவையற்ற பதற்றமும், கலவரமும்தான் ஏற்படும். வர்த்தக மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புவதை அரசு தடைசெய்யவேண்டும்.

***

இந்தச் சண்டை நடக்கும்போது அதை தடுக்கு முயற்சிகாமல் காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்தது சட்டபடியும் குற்றம். அதை தடுக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் செய்யாமல் விரட்டி, விரட்டி படம் எடுத்த போட்டோக் கிராப்பர்கள், கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் செய்தது தர்மபடி குற்றம்

தனிமனிதராக இந்தச் சண்டைய தடுக்க முயற்சித்த கேண்டின் பொறுப்பாளருக்கு இருந்த இந்த உணர்வும், தைரியமும் - காவல் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இல்லாதது வெட்கப்படக்கூடியது. மிகுந்த வன்முறை நிறைந்தது.

கண்முன்னே ஒருவன், புதைக்குழியில் சிக்கி ‘காப்பாற்றுங்கள்’ என்ற கூக்குரலிட்டபடி மரணதத்தோடு போராடுகிறான். பத்திரிகை, தொலைக்காட்சி கேமராமேன்கள் அவரை காப்பாற்றுவார்களா? மரணம் வரை படம் எடுப்பார்களா?

அதுபோன்ற காட்சிகள் கிடைப்பது அரிது. அதனால் மரணம் வரை படம் எடுப்பார்கள். பார்வையாளர்களை பரபரப்பாக்கி பல முறை பார்க்க வைக்கிற காட்சி அது. தொழிலில் ஒரு நல்ல பெயர் கிடைக்கும். முதலாளியின் பாராட்டையும் பெற முடியும். முன்கூட்டியே அந்த நபர் புதைக்குழியில் மாட்டிக் கொள்ளபோவது தெரிந்தால், நன்றாக மார்க்கெட்டிங் செய்து,This program sponsor by என்றும் ஒளிபரப்பலாம்.

அது மனித தர்மமாக இல்லாமல் இருக்கலாம். அதுதான் தொழில் தர்மம். தொழில் அதிபதிர்களுக்கு லாபம் தருகிற தர்மம். அதுவேதான் பத்திரிகை தர்மமும்.

நன்றி

வே.மதிமாறன்

http://mathimaran.wordpress.com

இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 11:37 PM

சனி, 15 நவம்பர், 2008

ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரியும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அமைதி ஊர்வலம் - பொதுக்கூட்டம் சேலம்


இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 2:39 PM

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய நாடாளுமன்றம் முன்பாக மாணவர்கள் பேரணி- போராட்டம்


ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் புதுடில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவின் 20-க்கும் அதிகமான மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

புதுடில்லியில் உள்ள இராமலீலா திடலில் தொடங்கிய இப்பேரணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவர் உமன் ஜீனு ஜக்காரியா இப்பேரணிக்குத் தலைமையேற்றார்.

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக அவர்கள் ஊர்வலம் நடத்தினர்.

நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலைக்கு முன்பாக பல இடங்களில் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதற்காகத் தடுப்பு அரண்களை அவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் தடுப்பு அரண்களை விலக்கிவிட்டு மாணவர்கள் தொடர்ந்து பேரணியை நடத்தினர்.

இந்திய நாடாளுமன்றத்திற்குச் சற்று தொலைவில் பேரணியை முடித்துக் கொண்ட மாணவர்கள், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, மகளிர் சங்க செயலாளர் ஆனிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.


இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 2:29 PM

வெள்ளி, 14 நவம்பர், 2008

கூட்டுறவு

கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகும். 
நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும். 
மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது. 
கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக-
நலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும். 
நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அதோகதியாகிவிடுமென்பது நிச்சயம்.
இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 11:16 PM

புதன், 12 நவம்பர், 2008

‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’- இதுதாண்டா இந்தியா

· கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம்.

· புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.’ - இது பழமொழி அல்ல.

· தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி.

· உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.

· ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது.

· குண்டால் அடிச்சி சோறுபோடுறான்.

· ‘இனி நம்ம கிட்ட ஒண்ணுமில்லே. எல்லாம் மேலே இருக்கிறவன்கிட்டதான் இருக்கு.’ -கையாலாகாத டாக்டரின் வசனம்.

· “அவளே போனபிறகு, நான் உயிரோடு இருக்கிறதுல அர்த்தம் இல்ல. என்னைவிடுங்க நானும் போய் சாகிறேன்.”

பொண்டாட்டியை இவனே தூக்குல மாட்டி தொங்க விட்டுவிட்டு, ஊர் மக்கள் மத்தியில் வசனம் பேசுகிறான் கொலைகார கணவன்.

· “தமிழர்களின் நலனுக்காகத்தான் போர்” என்று ராஜபக்சே சொல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.

நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி.

இதுதாண்டா இந்தியா.

-வே.மதிமாறன்

நன்றி

http://mathimaran.wordpress.com
இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 6:52 PM

செவ்வாய், 11 நவம்பர், 2008

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 9-11-2008 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் சிரீராம் திரையரங்கம் முன்பு  பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில்  காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாவட்ட பிரதிநிதி சி.கே.பழனிச்சாமி,ம.தி.மு.க வெளியீட்டு துணைச்செயலாளர் இல.தனபால், ஒன்றியசெயலாளர் அறிவரசு, இந்திய பொதுவுடமைக்கட்சியின் ஒன்றியசெயலாளர் வி குணசேகரன்,நகரச்செயலாளர் ஞானமூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலித்தங்கம்,பெருமாள்,தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் க.தேவேந்திரன், மற்றும் 
செ.வெள்ளிமலை,வே.கோபால்,சாஜித்,கதிரவன்,சண்முகசுந்தரம்,
பன்னீர்செல்வம்,மணிமாறன்,சோமசுந்தரம், சொல்லரசு துரைசாமி,சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 11:51 PM

ஞாயிறு, 9 நவம்பர், 2008

கொதித்தெழு தமிழினமே

சிங்களக் காடையர்கள் செய்கின்ற வன்கொடுமை 
அங்கு நம் இனத்தைப் பூண்டோடு அழிக்கிறதே! 
செங்குருதி சேற்றில் ஈழம் புதைவதோ? 
பொங்கி எழுந்து புறப்படு தமிழினமே!

தாயென ஒருத்தியாய்த் தாங்க வேண்டியவள் 
பேயெனக் கத்தி பிதற்றுகிறாள் அன்றாடம் 
நாயினும் இழிந்த நடிப்புலக காரிகையைச் 
சீயென உமிழ்ந்து சிலிர்த்தெழு தமிழினமே 

'இந்து'ராம் பார்ப்பான் இரண்டகம் விளைக்கின்றான் 
சந்தில் 'சோ' பார்ப்பான் சளைக்காமல் குறைக்கின்றான் 
வந்தேறி இனத்தின் வாலறுக்க வேண்டாமா?
செந்தீப் பிழம்பாய் திரளுக தமிழினமே!

கேட்டையே எண்ணிக் கீழறுப்புப் பண்ணக்
கோட்டானாய்த் தில்லிக் கூமுட்டை உள்ளவரை
நாட்டாமை செய்து நன்மை விளைப்பானா?
பூட்டுகள் நொறுங்கப் புறப்படு தமிழினமே!

படைக் கருவிகள் தந்து பயிற்சிக்கும் ஆள் அனுப்பி
தடைச்சுவர்கள் எழுப்பித் தாயக உரிமைப்போர் 
உடைபடச் செய்யும் ஓநாய்த் தில்லியர்க்கு 
விடைதர வேண்டும் நாம் வெகுண்டெழு தமிழினமே!

செழித்த போர் வேங்கைபிரபாகரன் பேர் சொன்னால்
புழுத்து நாறும் பொய் மூட்டைக் காங்கிரசார்
கழுத்தறுந்த கோழிகளாய்க் கண்டபடி குதிக்கின்றார்
கொழுப்படக்க வேண்டும் நாம் வெகுண்டெழு தமிழினமே

முரண்பட ஈழப்போர் முனையில்பின் னடைவெனினும்
சரண்படல் இல்லை. வீரச்சாவுதான் எல்லை எனத் 
திறன் காட்டி ஆர்க்கும் சினவேங்கைப் புலிகட்கே
அரண் சேர்க்க வேண்டும் நாம் ஆர்த்தெழு தமிழினமே!

யார் அணி நிற்பதென சண்டை இனி மாளட்டும்
பேரணிகள், சிறைப்படல்கள் பெருந்தீயாய் மூளட்டும்
போரணிபோல் எழுச்சிபுயல்வேகம் கொள்ளட்டும்
ஓரணி நாம் என்றே உலகே சொல்லட்டும்!
                                                                                      -தமிழேந்தி
 
       [ நன்றி. சிந்தனையாளன்,நவம்பர்-2008]
இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 11:31 PM

புதன், 5 நவம்பர், 2008

ஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்! இந்தியாவின் பச்சைத் துரோகம்!

தமிழ் ஈழத்தில் - சிங்கள ராணுவம் - தமிழர்களை இனப்படுகொலை செய்வது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தையே சூறை யாடி, தமிழர்களை கொன்று குவித்த இராணுவம், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜ.நா. பார்வையாளர்கள், தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டது.

விடுதலைப் புலிகளின் முழுமையான நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த வன்னிப் பிரதேச மக்கள் மீதும் குண்டு வீசத் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில் 5 மாவட் டங்களிலிருந்து தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். சொந்த மண்ணிலேயே "புலம் பெயர்ந்த உள்நாட்டு அகதிகளாக" வெட்ட வெளியில் கொட்டும் மழையில் முகாம்களில் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். 
 
இந்திய ஆட்சி வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டு மல்ல இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் முதல் தேதியன்று அரியானாவில் இந்தியாவின் ராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு, 100 சிங்கள ராணுவத்தினர் கொழும்பு திரும்பியுள்ளனர்.  அக்டோபர் ஒன்றாம் தேதி தங்களுக்கு இந்திய அரசு அளித்துள்ள பயிற்சி, புதிய பலத்தை உருவாக்கியுள்ளதாக இந்திய தொலைக்காட்சிகளுக்கு சிங்கள ராணுவக் குழுவின் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவின் பார்ப்பனியம் - தமிழர் படு கொலைக்கு துணைப் போகும் நிலையில் தமிழர்களின் நிலை மிக மோசமடைந்து வரும் ஆபத்தை உணர்ந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழு, உடனடியாக தமிழர்களுக்கு உதவிடும் மனிதாபிமான நட வடிக்கைகளை மேற்கொள்ள ராஜபக்சேயிடம் அனுமதி கேட்டுப் போராடி, உணவு, மருந்துப் பொருள்களுடன், யாழ்ப்பாணப் பகுதிக்கு விரைந் துள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப் பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரை வழிப் பாதையான ஏ-9 நெடுஞ்சாலைப் பாதையைக் கடந்த ஆகஸ்டு 2006 இல் மூடிய சிங்களப் பேரினவாத அரசு, அதற்குப் பிறகு திறக்கவே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக அய்.நா.வின் நிவாரண உதவிக் குழுக்களுக்காக 'மனமிறங்கி' திறந்துவிட்டுள்ளது. 51 லாரிகளில் 800 மெட்ரிக் டன் எடையிலான உணவு மருந்துப் பொருள்கள். அதன் வழியாக கடந்த 2 ஆம் தேதி சென்றுள்ளன. இந்த நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அனைத்துமே இலங்கை அரசு ஏற்பாடு செய்தவையாகும். இதில் 9 லாரிகளில் வெடிப் பொருள்களும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதை ஜ.நா.வின் குழு கண்டறிந்து அதிர்ச்சியடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சமாதானப் பேச்சுக்கு வழி வகுத்த நோர்வே நாடு, தனது அரசு செலவிலேயே கிளிநொச்சியில் 'சமாதான தூதரகம்' ஒன்றை பெரிய அளவில் கட்டித் தந்தது. அந்த சமாதான தூதரகத்தையே இப்போது சிங்கள ராணுவம் குண்டு வீசி தரைமட்டமாக்கிவிட்டது. சமாதான தூதரகத்துக்கு நேர் எதிரே அமைந்திருந்த, விடுதலைப் புலிகன் அரசியல் தலைமையகமும், அதே நாளில் சிங்களக் குண்டுவீச்சுக்கு பலியாகி தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது. சமாதானத் தூதரகத்தை தகர்த்து - இனி சமரசப் பேச்சே கிடையாது என்பதை சிங்கள அரசு உணர்த்திவிட்டது. இந்தியாவின் ஆயுதங்களோடும், இந்திய ராணுவத்தைச் சார்ந்த பொறியாளர்களின் நேரடி ஆலோசனைகளோடும் இந்த இனப் படுகொலைகள் ஒவ்வொரு நாளும் தொடருகின்றன.
 
இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ள இந்திய கம்யூனிட் கட்சியின் செயல்பாடுகள் தமிழர்களின் உணர்வு களுக்கு மருந்து போடுவதாக இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மத்தியிலே அமைச்சர்களாக இருந்தும், தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடிய வில்லை. சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர் களுக்குக்கூட தமிழக அமைச்சர்கள் வாய் திறக்க வில்லை. இந்திய கம்யூனிட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் தோழர் ராஜாவின் ஒரே குரல் தான் ஒலித்தது. ஈழத் தமிழர்களைக் காக்கும் போராட் டத்துக்கு இந்திய கம்யூனி°ட் கட்சி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. மத்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தமிழர்களைக் காப்பாற்றாத, குற்றத்தை செய்யும் ஆட்சிகளுக்கு அறிவுறுத்தவும், நடவடிக்கை எடுக்கக் கோரி நிர்ப்பந்திக்கவும் நடத்தப்படும் போராட்டத்தில் அவர்களை அழைப்பது எப்படி சாத்தியமாகும்? அப்படியே அழைத்தால், ஆட்சிகள் இதில் 'கேளாக் காதினராக' செயல்படுவதை சுட்டிக் காட்டிக் கண்டித்தால், அதை சகித்துக் கொள்வார்களா?
 
ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியாக எதிர்ப்புக் கருத்துகளைக் கொண்டவர்தான். பார்ப்பன உணர்வாளர்கள் தான்! ஆனால் கச்சத் தீவு பிரச்சினைக்கும், மீனவர் பிரச்சனைக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா கட்சிக்கு இந்திய கம்யூனிட் கட்சி அழைப்பு விடுக்கலாமா என்ற கேள்விகளுக்கு முன்னுரிமையும், அழுத்தமும் தந்து, 'லாவணி' நடத்துவது அவர்களின் அரசியல் துடிப்பைக் காட்டுகிறதே தவிர, ஈழத் தமிழர்கள் மீதான கவலையை அல்ல. ஒரு காலத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையில் உறுதி காட்டி வந்த தி.மு.க.வும் தனது நிலைப் பாட்டில் ஊசலாட்ட அணுகுமுறைகளையே மேற்கொண்டு வருகிறது. அடையாளத்துக்காகவும், சடங்குக்காகவும், ஆதரவு காட்டிப் பேசுவது என்ற நிலைப்பாட்டோடு தி.மு.க. தனது கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது. செஞ்சோலைப் படுகொலையைக் கண்டித்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு கடுகளவும் மதிக்கவில்லை. தி.மு.க.வும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. இனி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடக்காது என்று எம்.கே.நாராயணன் இப்போது மட்டுமல்ல, கடந்த ஆண்டே கலைஞரிடம் உறுதிமொழி தந்தார். அதற்குப் பிறகு 25 துப்பாக்கி சூடுகள் நடந்துவிட்டன. சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினார் முதல்வர். காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டு விட்டன. ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து கலைஞர் முரசொலியில் என்ன எழுதினார்?
 
"இந்திய நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக இந்திய நாட்டு மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சனையில் தமிழகம் தலையிடுமென்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது." ('முரசொலி' 24.2.2007)
இந்திய அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க, ஆயுதம் வழங்குவதும், இந்திய அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க ராணுவப் பயிற்சி தருவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளே என்று 'துக்ளக்' சோ, சுப்ரமணிய சாமிகளின் கருத்துகளையே எதிரொலித்து கலைஞரும் ஒப்புதல் வாக்கு மூலமும் தந்து விட்டார்.
 
இந்த நிலையில் இந்திய கம்யூனி°ட் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், கூட்டணி அரசியல் சாயம் பூசி, ஈழத்தில் அன்றாடம் தொடரும் தமிழினப் படுகொலைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பது தமிழின உணர்வாளர்களைக் காயப் படுத்துவதோடு, அன்றாடம் செத்து மடியும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகி விடாதா?
 
சம்பிரதாய கடிதங்களும் தீர்மானங்களும் சடங்கு களாகிவிட்டன. தமிழர்கள் மீது சிங்களம் நடத்தும் படுகொலைகளை மத்திய அரசு கண்டிக்க மறுக்கிறது. ஆயுத உதவிகளை நிறுத்த மறுக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது 'மவுன'த்தின் வழியாக ஏற்பு வழங்குகிறதா? கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள் கேட்கின்றன!
 
தமிழர்களே! செத்து மடியும் சொந்த சகோதர சகோதரிகள் கதறுகிறார்கள். பட்டினியால் பரிதவிக் கிறார்கள். குண்டு மழைக்கும் துப்பாக்கிச் சூட்டுக் குமிடையே அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் - தமிழன் என்று மார்தட்டி என்ன பயன்? என்ன செய்யப் போகிறோம்?
 
இந்தியாவின் பார்ப்பன நயவஞ்சகம் - ஆட்சிகள் மாறினாலும் தொடருகிறதே; இந்த இந்தியாவை எப்படி எனது தேசம் என்று அழைக்க முடியும்? இதில் எப்படி நான் குடிமகனாக இருக்க முடியும்? இந்தக் கேள்விகளை நோக்கி - தமிழகம் உந்தப்படுகிறது. ஆம்; வேகமாக உந்தப்படுகிறது.

இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 11:53 PM

ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ராகவேந்திரா கல்யாணமண்டபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, கர்நாடகாவை கடுமையாக விமர்சித்து பேசியது பாராட்டுக்குரியதுதானே?
-விமல்.

இதற்கு முன்பு தமிழர்களுக்கு எதிராக வன்முறை செய்த கன்னடர்களை விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், கர்நாடகாவில் இவர் படம் ஓட வேண்டும் என்பதுதற்காகத்தான். ஒக்கேனக்கல் பிரச்சினையின் போது, நிர்பந்தத்தின் காரணமாக, மேடையில் சத்யராஜ் போன்றவர்களின் மிக நேரடியான குற்றச்சாட்டின் நெருக்கடியின் காரணமாக கன்னடர்களை ரஜினி திட்டிப் பேசினார்.

அதன் விளைவாக ‘குசேலன்’ பட வெளியிட்டின் போது கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கன்னடர்களை திருப்தி படுத்துவதற்காக மன்னிப்பும் கேட்டார். அந்த மன்னிப்பின் மறுபக்கம், தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் கணிசமான பிரிவினர் ‘அவனா நீ?’ என்று குசேலன் படத்தை புறக்கணித்தனர். (பி. வாசுவும் படத்தில் தன் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தார்.)

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போய்விடுமோ என்ற பயத்தில்தான் ரஜினியின் இந்த கன்னட எதிர்ப்பு வீர வசனமும். ஈழத் தமிழர்கள் மீதான சென்டிமென்ட்டும்.

இதே காரணங்களுக்காகத்தான் நமது ‘உலக நாயகன்’ (என்ன கொடுமை சரவணன்) கமல்ஹாசன், தமிழர் பிரச்சினைகளுக்காக எந்த மேடையில் ஏறி பேசினாலும், பட்டும் படாமலும் ரொம்ப உஷாராக, ஒரு அத்துவைதியை போல் பேசுகிறார். (அய்யங்கார இருந்துக் கிட்டு அத்துவைதைத்தை ஆதரிக்கிறாரு, என்ன பெருதன்மை!)

‘தமிழன் என்கிற குறுகிய எண்ணத்தோடு….’ என்று கமல் பேசியதற்கு அர்த்தம், உண்மையிலேயே அவர் தன்னை உலக நாயகன் என்று நினைத்துக் கொண்டு பேசினார் என்று அர்த்தமாகாது.‘அது சும்மா தமாசு’ என்பது அவருக்கே தெரியும். வேறு மொழிகளிலும், பிற மாநிலங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்படுகிறது, நேரடியாக வெளியாகிறது என்பதுதான் அதற்கு அர்த்தம்.

கமலின் முந்தைய சாமார்த்தியமான அந்தப் பேச்சினால்தான் கர்நாடகத்தில், ‘குசேலனுக்கு’ வந்த எதிர்ப்பு ‘தசாவதாரம்’ என்கிற அய்யங்கார் அரசியல் படத்துக்கு வரவில்லை. (அய்யங்கார் மேன்மையை வலியுறுத்தியதால்தான் அந்தப் படத்தின் மீது அய்யர்களுக்குக்கூட கோபம். சில அய்யர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் போன்ற போர்வையில் அந்தப் படத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.)

ஆக, ரஜினி - கமல் இருவருக்கும் கன்னடர், தமிழர் என்கிற இன உணர்வெல்லாம் கிடையாது. அவர்களிடம் ‘பண உணர்வு’ மட்டும்தான் இருக்கிறது.

rajini_kamal_05

குறிப்பு
கதாபாத்திரத்திற்கு எந்தவகையிலும் பொறுத்தம் இல்லாமல், தேவர் மகன் படத்தில், வாலி என்கிற அய்யங்கார், ‘கமல்ஹாசன்’ என்கிற அய்யங்காரை ‘தமிழச்சி பால் குடிச்சவன்டா’ என்று சொறிந்து விட்டதையும், அந்த சொறியை எடுத்து, இது ‘நியாயமான அரிப்புதான்’ என்கிற பாணியில் சுஜாதா என்கிற அய்யங்கார், ‘குமுதம்’ என்கிற அயங்கார் பார்ட்டனர் பத்திரிகையில் பக்குவமாக ‘தேய்த்து’ விட்டதையும், ‘தமிழன் என்கிற குறுகிற எண்ணத்தோடு…’ என்று கமல் இப்போது பேசியதையும் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள வேண்டாம். அப்படி புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று அவர்களின் ‘கொள்கைகளை’ வைத்துதான் தலைப்பிட்டேன். மற்றப்படி கே. பாலசந்தரை நான் ‘குட்டை’ என்று சொல்லிவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல.

அதேபோல், ‘தமிழன் என்பது குறுகிய எண்ணம், அய்யங்கார் என்பது பரந்த எண்ணமா?’ என்று கேள்வி கேட்காதீர்கள்.

-வே. மதிமாறன்

இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 7:05 PM

ஞாயிறு, 2 நவம்பர், 2008

இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்...இன்று 2-11-2008 ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் துரைசாமி, சூலூர் தி.மு.க. நகரச்செயலாளர் ஜெகநாதன், கண்ணம்பாளையம் தி.மு.க செயலாளர் செங்குட்டுவன், சூலூர் ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் சூ.பெ.கருணாநிதி, முன்னாள் பேருராட்சி மன்ற துணைத்தலைவர் சூ.ஆ.முருகேசன்,பெரியார் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்,தமிழ்ச்செல்வி,வீரமணி,அ.ப.சிவா, மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி,கோவை நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பல்லாயிரக்கனக்கான மக்கள் பார்த்தவாறு சென்றனர். இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இராமகிருட்டிணன் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதலை கண்டித்தும் பேசினார்.
இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 11:25 PM

சனி, 1 நவம்பர், 2008

இலங்கை தோல்வியை எற்றுக் கொள்ள வேண்டும்-நடிகர் ரஜினி

ஈழத்தமிழர்களை பாதுகாக்க உண்ணாவிரதம் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுப்பாடு என்ற பெயரில் யாரையும் தக்கி பேசக்கூடாது தடை விதித்திருந்தது குறிப்பாக இந்திய,இலங்கை அரசுகளை விமர்சித்து பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டு விட்டு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி மாத்திரம் இயக்குனர் பாரதிராஜாவை பெய்ர் குறிப்பிடாமல் விமர்சித்தார். அதோடு நில்லாமல் ஈழத்தமிழர்கள் இந்தியர்கள் என்றும் பிழைக்கப்போனவர்கள் என்றும் ஏதிலிகளாக வந்திருக்கும் அவர்களை தாயகம் திரும்பியோர் என்று அழைத்தால் சலுகைகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அதிமேதாவித்தனமாக பேசினார்.வரலாறு எதுவும் தெரியாமல் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட தமிழே தெரியாத கலையுலகம் ஙே.. என விழித்துக் கொண்டிருந்தது கொடுமை. சன் தொ(ல்)லைக்காட்சி அதை நேரடியாக ஒலிபரப்பியது அதைவிடக் கொடுமை. ஏதோ... அந்தநேரத்தில் அங்கு வந்த திருமாவளவன் வரலாற்றை தெளிவு படுத்தி பதில்சொல்ல சத்தியராஜ் வழிமொழிய கொஞ்சம் தப்பித்தது. எப்போதும் குழப்பும் ரஜினி இங்கு தெளிவாக "முப்பது ஆண்டுகளாக ராணுவத்தை வைத்து சண்டை போட்டு ஜெயிக்க முடியலேன்னா தோல்வியை ஏத்துக்க வேண்டியத்தானே" என பேசி இலங்கை அரசுக்கு ஒரு குட்டு வைத்தார். எப்படியோ ஈழத்தமிழர்களுக்காக திரையுலகம் போராட்டம் நடத்தியது வரவேற்புக்குரியதே... ஆனால் திரையுலக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடத்திய போராட்டத்தினால் ஒரு எழுச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. நடிகர்கள் நடத்திய போராட்டத்தினால் தமிழக அரசு திரட்டும் நிதிக்கு ரூ.45 லட்சம் கிடைத்தது அவ்வளவு தான்.
இடுகையிட்டது பெரியார்தளம் நேரம் 5:57 PM
லேபிள்கள்: ஈழத்தமிழர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2022 (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2019 (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2014 (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2013 (1)
    • ►  டிசம்பர் (1)
  • ►  2012 (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
  • ►  2011 (2)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
  • ►  2010 (11)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (4)
  • ►  2009 (25)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (14)
  • ▼  2008 (107)
    • ►  டிசம்பர் (23)
    • ▼  நவம்பர் (13)
      • எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்
      • விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி
      • சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்த...
      • ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரியும் போர் நிறுத்தம் ச...
      • ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய நாடாளுமன்றம் முன்...
      • கூட்டுறவு
      • ‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’- இதுதாண்டா இந்தியா
      • ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் ...
      • கொதித்தெழு தமிழினமே
      • ஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாத...
      • ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறி...
      • இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து பெரியார் திராவி...
      • இலங்கை தோல்வியை எற்றுக் கொள்ள வேண்டும்-நடிகர் ரஜினி
    • ►  அக்டோபர் (13)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (5)
  • ►  2007 (8)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (6)

என்னைப் பற்றி

எனது படம்
பெரியார்தளம்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

மாவீரர் நாள்-2011 திருப்பூர்

மாவீரர் நாள்-2011 திருப்பூர்

மாவீரர் நாள்-2011 திருப்பூர்

மாவீரர் நாள்-2011 திருப்பூர்

தமிழ் நாள்காட்டி 2042

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்

பெரியார் பிறந்தநாள் 2010

பெரியார் பிறந்தநாள் 2010
கு.இராமகிருட்டிணன் பேசுகிறார்

வீரவணக்கம்

வீரவணக்கம்
தென்மொழி துரையரசனாருக்கு வீரவணக்கம்

பெரியார் பிறந்த நாள் விழா..2009

பெரியார் பிறந்த நாள் விழா..2009
இரு சக்கர வாகன ஊர்வலம்

பெரியார் பிறந்த நாள் விழா..2009

பெரியார் பிறந்த நாள் விழா..2009
பெரியார் பிறந்த நாள் விழா.. பெரியார் சிலைக்கு மாலை...

ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்

ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்

மாவீரர் நாள் விழா-உடுமலை

மாவீரர் நாள் விழா-உடுமலை

இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்

இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம்-சூலூர்

இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்

இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம்-சூலூர்

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

பெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்

பெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்

பெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்

பெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்

பெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்

பெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்

பெரியார் பிறந்த நாள் விழா 21-9-2008 திருப்பூர்

பெரியார் பிறந்த நாள் விழா 21-9-2008 திருப்பூர்

பெரியார் பிறந்த நாள் விழா21-9-2008 திருப்பூர்

பெரியார் பிறந்த நாள் விழா21-9-2008 திருப்பூர்

திருப்பூர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ஆர்ப்பாட்டம்

பார்க்க..படிக்க...

  • பகுத்தறிவு

tamil.kanimai.com/

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines
ThamilSeithi.Com

தமிழ்வெளி

More than a Blog Aggregator
விரல் நுனிகளின் ‘சத்த’சபை
சங்கமம்

Thiratti.com

Tamilish

மாற்று!

மாற்று! விருப்பத் தமிழ்வலைப்பதிவுள் தொகுப்பு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

NeoCounter

தமிழ்க்கடைகள்

ஏராளமான கடைகள் தமிழ் விற்க
எவருமில்லை காப்பாற்ற
-பாவலர் வையவன்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்..அந்தியூர்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்..அந்தியூர்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்..அந்தியூர்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்..அந்தியூர்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை

மூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை

மூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்  உடுமலை

மூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்  உடுமலை

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்

மூடநம்பிக்கை ஒழிப்பு போர்

டெல்லி ஆர்ப்பாட்டம் மலைக்க வைத்த மழலைகள்

டெல்லி ஆர்ப்பாட்டம் மலைக்க வைத்த மழலைகள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்

சு.ப.தமிழ்செல்வனுக்கு வீரவணக்கம்

சு.ப.தமிழ்செல்வனுக்கு வீரவணக்கம்

சிறிலங்கா அரசின் காட்டு மிராண்டித்தனமான செயல் - பெரியார் திராவிடர் கழகம் கோவையில் ஆவேச எதிர்ப்பு.

சிறிலங்கா அரசின் காட்டு மிராண்டித்தனமான செயல் - பெரியார் திராவிடர் கழகம் கோவையில் ஆவேச எதிர்ப்பு.

பெரியார் பிறந்த நாள் விழா பொதுகூட்டம்

பெரியார் பிறந்த நாள் விழா பொதுகூட்டம்

திருப்பூர் ஊர்வலம்

திருப்பூர் ஊர்வலம்

ராமன்பாலம் ஒரு வரலாற்று மோசடி கருத்தரங்கம் சுப்பராயன் எம்.பி பேசுகிறார்

ராமன்பாலம் ஒரு வரலாற்று மோசடி கருத்தரங்கம் சுப்பராயன் எம்.பி பேசுகிறார்

திருப்பூர் பெரியார் பிறந்த நாள் விழா ஊர்வலம்

திருப்பூர் பெரியார் பிறந்த நாள் விழா ஊர்வலம்

கோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;

கோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;

Map IP Address
Powered byIP2Location.com

Powered By Blogger