செவ்வாய், 22 ஜூலை, 2008

எனது உணர்ச்சி...

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு,அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்க்கை குணமாக இருக்குமோ அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத்தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய்,வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு , மற்றக் குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையை விட எப்படி அதிக போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ,அது போலத்தான் நான் வலுக் குறைவான பின் தங்கிய மக்களிட்ம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும்,மற்ற வகுப்பு மக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சியாகும்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்