வியாழன், 1 ஜனவரி, 2009

நாம் புரட்சிக்காரர்களே!


 
My Photo
பொதுநல சேவை என்பது மனித சமூக சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப் படுத்துகிற கூட்டத்துக்கும், கொடுமைப்படுகின்ற கூட்டத்துக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்?  கஷ்டப்பட்ட,படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்யவேண்டும். திருடனுக்கும் திருட்டுக் கொடுப்பவனுக்கும் எப்படி நன்மை செய்ய முடியும்? ஆதலால் நமது சேவை ஒரு நாளும் பணக்காரனுக்கும்,முதலாளிக்கும் நன்மையாய்க்காண முடியாது. அவர்களுக்கு இனியும் நன்மை செய்வது என்பது நமது கொள்கையுமல்ல. ஆகவே, நாம் பொதுநலச்சேவைக்காரர்கள் அல்ல; நாம் புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளுவோம். நமக்குச் சீர்திருத்தக்காரர்களும்,பொதுநலச் சேவைக்காரர்களும் பெரிய விரோதிகளேயாவார்கள். புரட்சி ஆரம்பித்த காலங்களில்தான் சீர்திருத்தங்கள்,பொதுநலச்சேவைகள் புறப்படும். எதற்கு? புரட்சிகளை அடக்குவதற்கு! ஆகையால் நாம் எந்த வித சீர்திருத்தவாதிகளுடனும் எந்தவித பொதுநல வாதிகளுடனும் சேராமல் தனித்து நின்றே புரட்சி செய்ய வேண்டும்.

                                      தந்தை பெரியார் ['குடியரசு' 5-2-1933]

வலைப்பதிவு காப்பகம்