வெள்ளி, 2 ஜனவரி, 2009

கூவி அழைக்கிறோம்



My Photo
• எங்கள் இயக்கம், சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கக் காத்திருக்கிறது.
• அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம். சாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம்.
• பிராமணன், சஷத்திரியன், வைசியன், சூத்திரன், எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.
• ஏழை என்றும் பணக்காரன் என்றும், முதலாளி என்றும் தொழிலாளி என்றும், எஜமான் என்றும் கூலி என்றும், ஜமீன்தாரன், வேறுபாடுகளையும் நிர்மூலமாக்கித் தரை மட்டமாக்கும் இயக்கம். மற்றும்
• குரு என்றும் சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜன்மம் பின் ஜன்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும், எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும், கீழ் ஜாதிக்காரனையும், முதலாளியையும், தொழிலாளியையும், ஏழையையும், பணக்காரனையும், சக்கரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும், அவனவனுடைய முன்ஜன்ம கர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தம் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும், சொல்லலாம். அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளை எல்லாம் வெட்டித்தகர்த்துச் சாம்பலாக்கி, எல்லோருக்கும் எல்லாம் சமம், எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கம்.
• சாதி சமய தேசச் சண்டையற்று, உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம்.
• இன்று உலகமெங்கும் தோன்றி தாண்டவமாடும் இயக்கம்.
• ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள்... வாருங்கள்... என்று கூவி அழைக்கின்றோம்.  
-தந்தைபெரியார்
[குடியரசு 30-07-1933]

வலைப்பதிவு காப்பகம்