நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும்,பதவி கிடைக்காதே என்று கவலைப்ப்டாமலும் சுதந்திரத் தமிழ் நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைபணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத் தமிழ்நாடு-என் இலட்சியம் என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச்சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு விநியோகிக்க ஆசைப்ப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொதுமக்களே! இளைஞர்களே! பள்ளி,கல்லூரி மணவர்களே! மணவிகளே! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்!
பெரியார்
[பிறந்தநாள் மலர் 17.9.1973]
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
சுயமரியாதை
மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
-தந்தை பெரியார்
-தந்தை பெரியார்
சனி, 7 ஆகஸ்ட், 2010
என்னடா தேசபக்தி
எதற்காக இந்தியா
புரிய வில்லை
எதைச்சொன்னாலும்
சொரணை யில்லை
நாடாளு மன்றம்
தமிழ் பேசாதாம்
நற்றமிழ், 'நீதி
மொழி' ஆ காதாம்!
யாரடா நாயே
இதை நீ சொல்ல
இந்திதான் நுழையுமா?
எம்மையே கொல்ல
பனிமலைக் காசுமீர்
தீப்பற்றி எரியுது
ஒரிசா சதீசுகர்
கோவணம் கிழியுது
ஆந்திரா கன்னடம்
மராட்டியம் மோதுது
அட உன், தேசபக்தி
அடிபட்டுச்சாகுது
மீனவன் சாகிறான்
தடுக்க மாட்டாய்நீ
முள்வேலிக்கம்பியை
அறுக்க மாட்டாய் நீ
குட்டி நாடுதான்
அதட்ட மாட்டாய்நீ
கொழுத்துப் பேசுவான்
உதைக்க மாட்டாய்நீ
எங்கள் தாயரின்
தாலி ஏன் அறுக்கிறாய்?
இத்தாலிக்காய் ஏண்டா
தமிழனை எரிக்கிறாய்?
-தமிழேந்தி
நன்றி
சிந்தனையாளன்
ஆக .2010
புரிய வில்லை
எதைச்சொன்னாலும்
சொரணை யில்லை
நாடாளு மன்றம்
தமிழ் பேசாதாம்
நற்றமிழ், 'நீதி
மொழி' ஆ காதாம்!
யாரடா நாயே
இதை நீ சொல்ல
இந்திதான் நுழையுமா?
எம்மையே கொல்ல
பனிமலைக் காசுமீர்
தீப்பற்றி எரியுது
ஒரிசா சதீசுகர்
கோவணம் கிழியுது
ஆந்திரா கன்னடம்
மராட்டியம் மோதுது
அட உன், தேசபக்தி
அடிபட்டுச்சாகுது
மீனவன் சாகிறான்
தடுக்க மாட்டாய்நீ
முள்வேலிக்கம்பியை
அறுக்க மாட்டாய் நீ
குட்டி நாடுதான்
அதட்ட மாட்டாய்நீ
கொழுத்துப் பேசுவான்
உதைக்க மாட்டாய்நீ
எங்கள் தாயரின்
தாலி ஏன் அறுக்கிறாய்?
இத்தாலிக்காய் ஏண்டா
தமிழனை எரிக்கிறாய்?
-தமிழேந்தி
நன்றி
சிந்தனையாளன்
ஆக .2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)