ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்!

நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும்,பதவி கிடைக்காதே என்று கவலைப்ப்டாமலும் சுதந்திரத் தமிழ் நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைபணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத் தமிழ்நாடு-என் இலட்சியம் என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச்சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு விநியோகிக்க ஆசைப்ப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொதுமக்களே! இளைஞர்களே! பள்ளி,கல்லூரி மணவர்களே! மணவிகளே! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்!
பெரியார்
[பிறந்தநாள் மலர் 17.9.1973]