செவ்வாய், 17 ஜூலை, 2012

வீண் பேச்சு வேண்டாம்; செயல்பட வாரீர்!


தங்கம் எடுத்தவன் யார்?
முத்துக்குளித்தவன் யார்?
வயல்கள் செய்தவன் யார்?
வரப்பு செதுக்குகிறவன் யார்?
மாடமாளிகை கட்டினவன் யார்?
நந்தவனம் வைத்தவன் யார்?
அனுபவிப்பவன் யார்? … என்று
சோம்பேறிப்பாட்டு பாடினால் போதுமா? இது செய்தவர்கள் யார், அனுபவிப்பவர் யார் என்று கடுகளவு அறிவுள்ளவனுக்கு தெரியுமே! அதாவது மடையன், ஏமாளி, மானமற்றவன் செய்தான்; தந்திரசாலி, வஞ்சகன், கடவுள் பிரச்சாரக்காரன் அனுபவிக்கிறான்; ஆகவே மடையன் புத்திசாலியாகி மானமற்றவனுக்கு மானஉணர்ச்சி ஏற்பட்டு இந்த நிலைமைக்கு காரணம் நமது ஏமாளித்தனமே ஒழிய கடவுளல்ல, மதமல்ல, முன் ஜன்மமல்ல, விதி அல்ல, இவையெல்லாம் புரட்டு இவைகளைத் தகர்த்தெறிவது எனது முதல் வேலை என்று எவன் எண்ணுகிறானோ அவனே முதலாளிகளை, செல்வவான்களை, மாடமாளிகை கூடகோபுரங்கள் அரண்மனையில் வசிப்பவர்கள் ஆகியவர்களை ஒழிக்கத் தகுந்தவனாவான்.
—-தந்தை பெரியார். [குடியரசு 6-7-1946]