திங்கள், 1 டிசம்பர், 2008

ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்

தமிழர்களின் மீது விமானம் மூலம் குண்டுகள் வீசி படுகொலைகள் செய்து வருகிற சிங்கள இனவெறி இலங்கை அரசை கண்டித்தும். இலங்கை அரசுக்கு ராணுவபயிற்சி,கருவிகள், பொருளாதாரஉதவிகள் என தொடர்ந்து உதவி செய்து தமிழர்களை கொன்றொழிக்க துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை விளக்கியும் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில்
தமிழகமெங்கும் நடைபெற்று வருகிற பிரச்சாரப்பயணம்  30-11-2008 ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் வந்தடைந்தது. திருப்பூரில் அனுப்பர்பாளையம்,பழைய பேருந்துநிலையம், வெள்ளியங்காடு.
வீரபாண்டி பிரிவு ஆகிய் இடங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் எழிலன், பெரியார்திராவிடர் கழக நிர்வாகிகள் அங்ககுமார்,துரைசாமி,அகிலன்,முகில்ராசு,கார்த்திகேயன், 
ராஜேஷ்குமார்,விவேகானந்தன், மற்றும் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.                                            

வலைப்பதிவு காப்பகம்