புதன், 21 ஜனவரி, 2009

கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் விடுதலை

சீமான்,கொளத்தூர் மணி பெ.மணியரசன் ஆகியோர் இன்று சிறையிலிருந்து வெளிவருவார்கள்!

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவை மத்தியச் சிறையிலிருந்து இம்மூவரும் விடுதலையானார்கள். சிறை வாயிலில் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்க தாரை,தப்பட்டை முழங்க மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் மூவரும் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி, இயக்குனர்சீமான்,

பெ.மணியரசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டவர்களிடையே பேசும்போது சீமான் பிரபாகரனை ஆதரித்து பேசக்கூடாது என்று சொல்கிறார்கள் தலைவர் பிரபாகரனை ஆதரிக்காமல் வேறு எவனை ஆதரிப்பது? பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் ஈழத்துக்கு எதிராக கச்சை கட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். மிரட்டலுக்கு பயப்படாமல் தொடர்ந்து ஈழத்துக்காகவும்,ஈழமக்களுக்காக போராடுகிற விடுதலைப் புலிகளுக்காகவும் குரல் கொடுப்பேன் என முழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தொண்டர்களுடன் அனைத்துவணிகர்சங்கப்பேரவை,விடுதலைச்சிறுத்தைகள், ஆதித்தமிழர்பேரவை, தலித்விடுதலைக்கட்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வலைப்பதிவு காப்பகம்