புதன், 28 ஜனவரி, 2009

கூலிகளை உற்பத்தி செய்வதுதான் கல்வியா?



My Photo
சர்க்கார் இவ்வளவு வரிப்பணத்தை படிப்புக்காக செலவு செய்தும் படிப்பு இலாகா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தி வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெற கூலிகளை தயார் செய்யும் கருத்தோடுதான் செய்கின்றார்கள். அதனால்தான் தற்காலக் கல்வி வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது. மனிதனுக்கு கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும், அவ்வறிவால், தான் இன்புறவும், மக்கள் இன்புறவுமாக தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே, இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாததாகவே இருக்கிறது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாகவோ தொழிலாகவோ போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.

வலைப்பதிவு காப்பகம்