வெள்ளி, 17 அக்டோபர், 2008

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசைக் கண்டித்து 13-10-2008 திங்கள் மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைச்செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை தாங்கினார். பெரியார்திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு துரைசாமி,ஆதித்தமிழர்பேரவை மாநில இளைஞரணி செயலாளர் நீலவேந்தன்,அகிலன்,முகில்ராசு,கார்த்திகேயன்,சண்முகம்,தியாகு மனிதநேயப்பாசறை அமைப்பாளர் சக்திவேல்,இயற்கைவாழ்வகம் முத்துச்சாமி,புரட்சிர இளைஞர் முன்னணி கதிரவன் ஆகியோர்கலந்துகொண்டு பேசினார்கள். பெண்கள்,குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வலைப்பதிவு காப்பகம்