ஞாயிறு, 28 டிசம்பர், 2008

துரோகமல்ல...


My Photo
நமது வீட்டில் கொசுக்களின் உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக்கொள்வோம். கொசுக்கடிக்கு பயந்து  கொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசுவுக்குத் துரோகம் செய்தது ஆகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசுவாதம், கொசுத்துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால்   கொசுவுக்குப் பயந்துகொண்டு கொசு வலையை அறுத்தெரிந்து விட்டு கொசுக்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டையர்களாக படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் 
தன் சொத்தை பாதுகாத்துக்கொள்ள நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப்பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக் கொண்டு  பத்திரமாய்ப் படுத்திருப்பது  துரோகமாய்க்கூட தோன்றலாம்.  ஒரு சமயம் இதனால் அத்திருடன்  குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நம் பயந்து கொண்டோ, பரிதாபப் பட்டுக்கொண்டோ கதவை திறந்து போட்டு படுத்துக் கொள்ள வேண்டுமா? கொஞ காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந்தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப்போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்த தொழில் இனி நமக்கு பிரயோஜனப்படாது என்பதாகக் கருதி வேறுஏதாவது யோக்கியமான தொழிலில் ஈடுபட்டு யோக்கியமாக பிழைக்கக் கற்றுக்கொள்வான். ஆதலால் நாம் ஜாக்கிரதையாக இருப்பதன் மூலம் நமது சொத்து பதுகாக்கப் படுவதன் மூலம் திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படுகிறது. ஆகையால் 
இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல் காப்பாற்ற முயலுவதினாலேயோ எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர்களாக 
மாட்டோம். 

                                                    --தந்தைபெரியார்
                                                      [குடியரசு 6-2-1927]





வலைப்பதிவு காப்பகம்