செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஆயுதம்

அகிம்சை என்பது கோழைத்தனம் என்பேன் மற்றவர்களைக் கோழையாக்கி அடக்கித் தாங்கள் வாழ-தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள். நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசிய சமணர்களின் தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. 'ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பிக் காட்டு', மேல் வேடியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு' என்றார் ஏசு.  ஆனால் இன்று அந்தக் கிருத்துவர்கள் தான் வெடிகுண்டு,அணுகுண்டு  செய்கிறார்கள்.   இம்சை செய்வதற்காக அல்ல; எதிரியிடம் ஒரு அணுகுண்டு இருக்கும் போது என்னிடமும் 2,3 இருக்கிறது என்று சொன்னால்தான்  தான் தப்பிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. செங்கோல் தடியும்,உடைவாளும் இல்லாத அரசன் கிடையாது. எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது கத்தியும்,கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின. ஆயுதம் இல்லாத காரணத்தினாலேயே சமணம் அழிந்தது.எனவே நமக்கு அவசியம் கத்தி வேண்டும்.    
                                     தந்தைபெரியார் -['விடுதலை' 25-10-1956]

வலைப்பதிவு காப்பகம்