திங்கள், 29 டிசம்பர், 2008

அரசியல் தொண்டு ஒரு புரட்டு

சமூகத்தொண்டிற்கும்,அரசியல் தொண்டிற்கும்,ஒன்றுகொன்று சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதானது சமூகத்தொண்டிற்கு பெருத்தகேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும் அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்கு தேவை இல்லாதது என்றே சொல்லுவோம். அரசியல் அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச்செய்வதே அல்லாமல் வேறில்லை 
    அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோகியனாக்கிக் கொள்ளாமலும் தேசத்தை சமூகத்தை காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே முடியாது.  
                 
                                                             -தந்தை பெரியார்



வலைப்பதிவு காப்பகம்