வியாழன், 10 ஜூலை, 2008

கண்ணாமூச்சி

சின்னவனாய்
அன்று...
என்

கண்களை
கட்டிவிட்டு
ஆட்களை
கண்டுபிடி
என்றார்கள்.
முயன்றேன்...

முடியவில்லை
பெரியவனாய் இன்று-

கண்களைத்
திறந்துகொண்டே
ஆட்களை
கண்டுபிடிக்கும்
விளையாட்டு...
முயல்கிறேன்...

முடியவில்லை.
-காசி ஆனந்தன்

வலைப்பதிவு காப்பகம்