புதன், 23 ஜூலை, 2008

உடைப்பஞ்சம் ஒழிய

ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்டவேண்டும். ஜிப்பா போட வேண்டும்.உடைகளில் ஆண்-பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது.ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். ஆண்களைப் போலவே தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல், வீண் அல்ங்காரம் செய்து கொண்டு திரிவது பெண் சமுதாயத்தின் கீழ் போக்குக்குத்தான் பயன்படும்.
நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள்தான் என்பதை 'அவர்கள்' உணர வேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி,ஏழடி என்று கூந்தலை வளர்த்துக்கொள்வது அநாகரீகமும்-தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.
-தந்தைபெரியார்.

வலைப்பதிவு காப்பகம்