சனி, 9 ஆகஸ்ட், 2008

நமது இழிவு நீங்கி மேம்பாடடைய...

நமது சமுதாயத்தில் உள்ள ஒரு பெரிய குறை நமக் கென்று நமது இனத்திற் கென்று ஒரு தாபனம்,ஒரு தலைவன் இல்லாததே யாகும். எந்த உத்தியோகம் பார்த்தாலும் எந்தக் கொள்கை உடையவர்களாக இருப்பினும், எந்தச் சாதியைச் சார்ந்தவராக இருப்பினும் எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், தமிழன் என்றால் எல்லோரும் ஒன்றாகக் கூட வேண்டும். அதில் எந்தக் கருத்து வேறுபாட்டிற்கும் இடம் இருக்கக்கூடாது. ஆகவே தமிழர்கள் யாவரும் ஒன்று கூடும்படியான ஒரு தாபனம் வேண்டும் அதைத் துவக்க நீங்கள் முயற்சி எடுத்துக்கொள்ளவெண்டும். அந்த தாபனத்தில் தமிழர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக்க வேண்டும் அதற்குத் தமிழர் முன்னேற்றத் தாபனம் என்றோ, ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றத்தாபனம் என்றோ ஏதோ ஒரு பெயர் வைத்துக்கொண்டு தமிழர் அனைவரையும் அதில் உறுப்பினராக்க வேண்டும். தமிழர்களுக்கு எற்படும் குறைகளை அதன் மூலம் போக்கிக் கொள்ள முற்பட வேண்டும்.

-தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்